பக்கம் : 414
 

 

584.

மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்
கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்
உற்ற மங்கலக் கலங்க ளோடுடன்
முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும்.
 

     (இ - ள்.) மற்றவன் - அங்ஙனம் முகமன் மொழிந்த துருமகாந்தன், தனக்கு -
தன்பால், உரைத்த மாற்றமும் - கூறியமொழிகளும், கொற்றவன் - பயாபதிவேந்தன், விட -
ஏவாநிற்ப, கொம்பனார் சிலர் - பூங்கொம்பை ஒத்த அழகிய மகளிர்கள் சிலர், உற்ற -
பொருந்திய, மங்கலக் கலங்களோடு - மங்கலப் பொருள்களோடு, உடன்முற்ற - ஒருங்கே
வந்து தன்னைச் சூழ்தலானே, ஊண் தொழில் - பின்னர் உண்ணும் தொழில், முடிந்த -
முற்றிய, பெற்றியும் - தன்மையும், (எ - று.)

     ஏறுக!, என்று கூறிய துருமகாந்தன் தனக்குக்கூறிய உரைகளும், பயாபதி மன்னன்
பணியால் மகளிர்கள் வந்து மங்கலக் கலங்களைக் கொண்டுவந்து தன்னை உண்ணச் செய்த
பெருமையும் (கூறினான் என்க).
 

( 12 )

 
585.

1பங்க யத்தலர்ச் செங்கண் மாமுடித்
திங்கள் வண்ணனுஞ் செம்போ னீள்குழைப்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்தது மவர்கள் சொற்றதும்.
 
 

      (இ - ள்.) பங்கயத்து அலர் செங்கண் - செந்தாமரை மலர் போன்ற சிவந்த
கண்களையும், மாமுடி - சிறந்த முடியையும் உடைய, திங்கள் வண்ணனும் -
திங்களைப்போன்ற வெண்ணிறம் படைத்த விசயனும், செம்பொன் நீள்குழை - செந்நிறப்
பொன்னாலாகிய நீண்ட குண்டலங்களை அணிந்தவனும், பொங்கு வெண் திரை புணரி
வண்ணனும் - பொங்குகின்ற வெள்ளிய அலைகளை எறியும் கடலின் நிறத்தை
உடையவனுமாகிய திவிட்டனும், அங்கு வந்ததும் - அவ்விடத்தை அடைந்த செய்யும்,
அவர்கள் -அவ்விசய திவிட்டர்கள், சொற்றதும்-தனக்குச் சொன்ன மொழிகளும், (எ-று.)

     திங்கள் வண்ணனும், புணரி வண்ணனும் அப் பொழிலிடத்தே வந்து தன்னைக்
கண்டு கூறிய முகமன் மொழிகளையும், (கூறினான் என்க.),

( 13 )