பக்கம் : 415 | | | 586. | நற்பு றத்தன நாற்ப தாம்வய திப்பு றத்தன விளங்க ருங்கைம்மா மொய்ப்பு 1றத்துமேன் முழங்கு தானையோ டப்பு றத்தர 2சவைய டைந்ததும். | (இ - ள்.) நல் புறத்தன - நல்லிலக்கணம் அமைந்த முதுகையுடை யனவும், நாற்பதாம் வயது இப்புறத்தன - நாற்பது வயதிற்குட்பட்டனவும் ஆகிய, அளம் கரும் கைம்மா - இளமை மாறாத கரிய யானைகளின், மெய்ப்புறத்து மேல் - திண்ணிய எருத்தின் மிசை ஏறி இவர்ந்து, முழங்கு தானையோடு - தன்னை எதிர்கொண்டழைத்தற் பொருட்டு முரசு முதலிய இசைக் கருவிகள் முழங்கவந்த படைகளோடும் சென்று, அப்புறத்து அரசவை அடைந்ததும் - அயலதாகிய பயாபதி மன்னனுடைய அத்தாணி இருக்கையை எய்திய செய்தியும், (எ - று.) நாற்பதாட்டைப் பருவமிகவாமையே, யானைகட்குச்சிறந்த பருவம் என்பார், நாற்பதாம் வயதிப்புறத்தன என்றார். நாற்பதாம் வயது கடப்பதற்கு முன்னரும் கிழத்தோற்றம் வந்துவிடுதல் உண்மையின், இளங்கருங்கைம்மா என்றார். அப்புறத்து அரசவை அடைந்த செய்தியும் (கூறினான் என்க.) | ( 14 ) | | 587. | மன்ன வன்கழல் வணங்கி நின்றதும் 3பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும் பொன்னி றப்பொறி பிகழ்ந்த சாதகந் துன்னி வாசகந் தொழுது கொண்டதும். | (இ - ள்.) மன்னவன் கழல் - பயாபதி வேந்தனுடைய வெற்றிக்கழல ணிந்த அடிகளை, வணங்கி நின்றதும் - வணக்கம் செய்து அவன் திருமுன் நின்றதும், பின் அவன்தனால் - அதன் பிறகு அவ்வேந்தனுடைய அருளால், இருக்கை பெற்றதும் - தன் தகுதிக்கேற்ப ஆதனத்தின்கண் இனிதின் அமர்ந்ததும், பொன்னிறப்பொறி - பொன்மயமான இலச்சினை யிடப்பட்டதும், புகழ்ந்த - சொல்லழகு பொருளழகு முதலிய திருமுக விலக்கணங்களால் நிறைந்து அறிஞர்களால் புகழப்பட்டதுமாகிய, சாதகம் - திருமுடங்கலை, தொழுது துன்னி - கைகூப்பித்தொழுது அதன்கண் மனத்தால் நெருங்கி, வாசகம் கொண்டதும் - அதன்கட் பொறித்துள்ள மொழிகளை விழிப்புடன் ஓதுவித்து அறிந்துகொண்டதும், (எ - று.) சாதகம் - செய்துமுடித்தது என்னும் பொருட்டு. துன்னுதல் - விழிப்புடன் பொருளுணர்தல். அரசவை அடைந்து பயாபதியை வணங்கியதும், அம் மன்னனால் இருக்கை பெற்றதும் பின்னர்த் திருவோலையைத் தான் அவனுக்கீந்ததும் அவன் அதனை நனகுமதித்து ஓதுவித்துணர்ந்ததும் ஆகிய செய்திகளையும் (கூறினான் என்க.) | ( 15 ) |
| (பாடம்) 1. றத்து மொண். 2. சடைந்தவாயிலும். 3. இன்ன. | | |
|
|