பக்கம் : 421
 

இதனால் செங்கோன்மை தழி இக் கோலோச்சும்அம்மன்னன் நாட்டிடை வாழும் மாந்தர்
சிறப்புணர்த்தப்பட்டமை காண்க.
 

( 24 )

 

597.

1கோதி லார்குல மக்கண் மாக்கண்மற்
2றேதி லாரென வியைந்த தின்மையார்
ஆத லாற்றமர் பிறர்க 3ளாவதங்
கோதி 4லாரவர்க் குள்ளஃ தில்லையே.
 

     (இ - ள்.) கோது இலர் - அவன் குடையின் நீழலார் குற்றம் இல்லா தவரும்,
குலமக்கள் - உயர்குடியிற் பிறந்தவரும், கல்வி கேள்விகளிற் சிறந்தவருமே ஆவர்,
இயைந்தது இன்மையார் - அவன் குடை நீழலில் பொருந்துதல் இல்லாதார், மாக்கள் மற்று
ஏதிலர் - கல்லாதாரும் பகைமையுடையாரும் இன்னோரன்னாரும் ஆவர், ஆதலால் -
இங்ஙனம் இருந்தவாற்றால், அங்கு - அச்சுரமை நாட்டில், ஓதில் - ஆராய்ந்து கூறுங்கால்,
அவர்க்குள் - அங்கு வாழ்பவர்க்குள்ளே, தமர் பிறர்கள் ஆவது - ஒருவர்க்கொருவர்,
தமராகவாதல் பகைவராகவாதல் கண்டு கூறுவதற்கு, அஃது - அவ்வேற்றுமை, இல்லையே -
இல்லை, (எனவே இயலா தென்பதாம்) (எ - று.) பகையின்மையால் உறவு மில்லை என்க.

     “கல்லாது நிற்பார் பிறரின்மையிற் கல்விமுற்ற வல்லாருமில்லை“ என்னுங் கம்பநாடர்
செய்யுளோடு “ஆதலால் தமர் பிறர்கள் ஆவது அங்கு ஓதில் இல்லையே“ என்னும்
இவ்வடியை ஒப்பிடுக.
 

( 25 )

 
598.

வைய மின்புறின் 5மன்ன னின்புறும்
வெய்ய 6தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதன்
றைய தாரினா னருளின் வண்ணமே.
 
 

      (இ - ள்.) செய்ய கோலினாய் - செங்கோன் முறை தவறாத அரசனே;
ஐயதாரினான் - அழகிய மாலையணிந்த பயாபதி மன்னன், வையம் இன்புறின் - தன்குடை
நீழல் வாழ்வோர் இன்பம் எய்தும்பொழுது, தானும் இன்புறும் - அவர்கள் எய்திய
இன்பத்தைத் தான் எய்தியதாக எண்ணிமகிழு வான், வெய்யது ஒன்றுறின் - அங்ஙனமின்றி
அவர் யாதானுமொரு துன்பத்தை எய்தியபொழுது, தானும் வெய்துறும் - அது
பொறானாய்த்தானும் துன்புறுவான், மன்னன் அருளின் வண்ணம் ஏ - செங்கோன்
மன்னனாகிய பயாபதியின் அருட்பெருமை, செப்பலாவது அன்று - இங்ஙனமாகலின்
இயம்பும் எளிமைத்தன்று (எ - று.)

 

     (பாடம்) 1. கோதிலாதவர் மக்களும். 2. எதிலா ரவரி யைந்ததின்மையால். 3. ளென்பதங். 4. னாலவற். 5. தானும். 6. தோன்றுறின்.