பக்கம் : 427
 

இதுவுமது

608.

ஆத லா 1லஃ தறியும் வாயிலா
வோது மாண்பினா னொருவ னொற்றனாய்த்
தீதி றனையாய் செல்ல 2வைப்பதே
நீதி 3யாமென நிகழ்த்தி னாரரோ.
 

     (இ - ள்.) ஆதலால் - சதவிந்து அங்ஙனம் கூறியுள்ளபடியால், தீதுஇல் தானையாய்
- குற்றமில்லாத படைமன்னனே!, அஃதறியும் வாயிலா - அந்நிகழ்ச்சியை
அறிந்துகொள்ளுமாறு, ஓதுமாண்பினான் ஒருவன் - ஒற்றற் கோதிய மாண்புகள் அனைத்தும்
அமைந்த ஒருவனை, ஒற்றனாய்ச் செல்லவைப்பதே நீதி ஆம் - ஒற்றனாகப் போக்குவதே
நியாயமாக எமக்குத் தோன்றுகின்றது, என நிகழ்த்தினார் - என்று கூறினார், அரோ :
அசை, ( )

     ஆதலால் அவ்வாறு நிகழ்வதனை அறியும் பொருட்டு ஓர் ஒற்றனை யாம்
போதனத்தே போக விடுதலே நன்றென்று யாம் கருதுகின்றறோம் என்றார் என்க. எல்லா
அமைச்சருடைய கருத்துமிதுவே ஆகலின் என்றார் எனப் பன்மைப்பாலாற் கூறினார்.
 

( 36 )

மன்னன் ஒற்றாய்தல்
609.

உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
வைத்த வொற்றினன் மன்ன னானபி
னத்தி 4றத்தினே யமர்ந்த சிந்தைய
னொத்த சுற்றமோ டுவகை யெய்தினான்.
 

      (இ - ள்.) மன்னன் - சடிவேந்தன், அவர் உய்த்து உணர்ந்து உரைத்த -
அவ்வமைச்சர்கள் ஆராய்ந்து அறிந்து கூறிய, நீதிமேல் - நீதியை மேற்கொண்டு, வைத்த
ஒற்றினன் ஆனபின் - அச்செயல்மேல் வைக்கப்பட்ட ஒற்றனை உடையானாய பிறகு,
அத்திறத்தினே அமர்ந்த சிந்தையன் - அத்துணையானே அமைதியை அடைந்த
உள்ளத்தை உடையவனாய், ஒத்த சுற்றமொடு உவகை எய்தினான் - மனம் ஒத்த
சுற்றத்தார்களோடு அளவளாய் மகிழ்ச்சியடைந்தான், (எ - று.)

 


     (பாடம்) 1. லவற் கறியும். 2. வைப்பதா. 3. நீதியாவது நீடு தோளினாய். 4. றத்தினை.