அச்சுவகண்டனுடைய மார்பகத்தை வயலாக வைத்து, மடுத்துஉழ - நன்கு உழுதலாலே, துஞ்சல் ஓவும் தொழிலினன் ஆயினான் - உறக்கம் ஒழித்து அக்காமத்தொழில் ஒன்றிலேயே மிக்கவன் ஆனான். ஆண்டுப் பயாபதி “காவல் ஓவுங்கொல் என்று கண்படான்“ என்றதை - ஈண்டு அச்சுவகண்டன் துஞ்சலோவும் தொழிலினன் ஆயினான், என்பதனோடு வைத்து ஆராய்க, (எ - று.) மிதிக்கினும் எனல் வேண்டிய உம்மை விகாரத்தால் தொக்கது. “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்“ என்றார் திருவள்ளுவரும். அம்முலை நாஞ்சிலா என்றமையால் மார்பாகிய வயல் என்று கூறுக. அச்சுவ கண்டன் கழி காமமுடையனாய் அத்தொழிலிலே மிக்கான் என்க. |
( 39 ) |
|
612. | முத்த வாணகை 1மொய்பவ ளத்துணி யொத்த வாயமு 2தொண்கடி கைத்திரள் வைத்த வாயின னாய்மட வார்கடஞ் சித்த வாரிக ளுட்சென்று தங்கினான். |
(இ - ள்.) முத்தம் வாள்நகை - முத்துக்களைப்போன்று ஒளியையுடைய பற்களோடு கூடிய; மொய் பவளம் துணி ஒத்தவாய் அமுது - திண்ணிய பவளத்துணுக்கை ஒத்த வாயில் ஊறும் அமுதத்தை உண்ணும் பொருட்டு, ஒண்கடிகைத்திரள் வைத்த வாயினனாய் - ஒளிபொருந்திய அதரங்களாகிய திரட்சியுடைய உண்கலங்களிற் பொருந்தவைத்த வாயை உடையவனாய், மடவார்கள் தம் - அவ்விள மகளிர்களுடைய, சித்தவாரிகளுள் சென்று தங்கினான் - உள்ளமாகிய கடல்களிலே வீழ்ந்து முழுகிக்கிடந்தான், (எ - று.) மகளிர் பலர் என்பது தோன்ற, சித்தவாரிகள் என்றார். கடிகை - கலம். தங்கினான் - அழுந்தினான். அச்சுவகண்டன் மகளிர் அதரத்தே வைத்த வாயினனாய் அவர்தம் மனக்கடலுள் ஆழ்ந்தான் என்க. மகளிர் அவனைக் கரையேற விடாமல் தம் மனப்படியே தம் மின்பத்தே மூழ்கிக் கிடக்கச் செய்தலின் அவர் மனத்தைக் கடல் என்றார். |
( 40 ) |
இதுமுதல் 9 செய்யுள்கள், அச்சுவகண்டன் காமக்களியாட்டம் கூறுவன |
613. | ஆரந் தங்கிய மார்பனு 3மந்தளிர்க் 4காருங் கொம்பனை யாருங் கலந்துழித் |
|
|
|
(பாடம்) 1. சூழ்பவயத்திரள். 2. தக்கடி. 3. மாந்தளிர்க், 4. காருண். |