(இ - ள்.) தோடு மல்கு - இதழ்கள் செறிந்தனவும், சுரும்பு அணிய அளிகள் நிரலாக மொய்ப்பனவும் ஆகிய, கோதையார் - மலர்மாலைகளை அணிந்த மாதர்களின், கோடி மென்துகில் - புதிய மெல்லிய ஆடைகளாற் சுற்றப்பட்ட, குய்யத்தடம் - அல்குலாகிய தடாகத்தில், ஆடி - குடைந்து விளையாடுதலேயன்றி, தன் அணையாமையிற் - தன்னைக் காதலித்துச் சேர்தல் இன்மையால், பூமகள் - நிலமடந்தை, ஊடல் உற்று - அச்சுவ கண்டன் பாற் பிணங்கி, இடம் பார்த்து உளாள் - அவனைப் பிரிந்துபோய் விடுதற்கேற்ற செவ்வியைத் தேர்ந்து அச்செவ்வி அமையுந் துணையும் அவன்பால் தங்கியிருப்பவளாயினாள், (எ - று.) பூமகள் - திருமகள் எனினுமாம். பூமகள் எனப் பொதுவிற் கூறினார் நிலமகள் திருமள் கலைமகள் மூவரும் அகல்வார் என்பது தோன்ற. “செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்“ (திருக். 1039) என்று உழவர்க்கோதியது அரசர்க்கும் ஒக்குமாகலின் நிலமகள் ஊடிப் பிரிதற்கு இடம் பார்த்திருந்தாள் என்க. |
இதுமுதல் 8 செய்யுள் ஒருதொடர் நிமித்திகன் கூற்று. (இ - ள்.) அறிவின்கடல் தாங்கினான் - அறிவுக்கடலைத் தன்னகத்தே உடையவனும் நீங்கலாப்புகழான் - அழியாத பெரும்புகழ் படைத்தவனும், சதவிந்து என்பான் - சதவிந்து என்னும் பெயரையுடையவனும் ஆகிய, தன் நிமித்திகன் உளன் - தன் அவைக்களத்தே உள்ளவனாகிய நிமித்திகன்,
|