பக்கம் : 435
 

     வீங்குவெல் கழலாற்கு - மிக்க வெற்றியையுடைய வீரக்கழலணிந்த அச்சுவகண்டனுக்கு
ஆங்கு ஓர்நாள் இறை பெற்று - அவ்விடத்தே ஒரு நாளில் அரிதில் ஒரு செவ்விபெற்று,
விளம்பினான்- சொல்வானாயினான்,
(எ - று.)

செவ்வி பெறுதல் அரிதென்பது தோன்ற, ஆங்கோர் நாளிறை பெற்று என்றார்.
அறிவின் கடலன்ன நீங்காப்புகழான் சதவிந்து வெல் கழலாற்கு விளம்பினான் என்க.
 

( 50 )

அரசர்க்குரிய அறுவகைப பகைகள்

623.

மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்
தன்னை யாள்பவர்க் கோதின தங்கணே
பன்னி னாறு பகைக்குல 1மாமவை
முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான்.
 

     (இ - ள்.) முகம்நோக்கினான் - (அரிதிற் செவ்விபெற்று) அச்சுவகண்டன் முகத்தை
நோக்கலுற்ற சதவிந்து, மன்னகேள் - அரசே என் விண்ணப்பத்தைக் கேட்டருள்க!,
வளைமேய்திரை மண்டிலம் தன்னை - சங்குகள் மேய்கின்ற கடலாற் சூழப்பட்ட -
உலகத்தை, ஆள்பவர்க்கு ஓதின - ஆளுகின்ற அரசர்களுக்கு என எடுத்துரைக்கப்பட்டன,
தங்கணே பன்னின் - அவ்வரசரிடத்தே வைத்து ஆராய்ந்துரைப்பின், ஆறு பகைக்குலமாம்
- அவர்கட்கு உட்பகையாவன ஆறாம், அவை முன்னம் வெல்க என்றான் -
அவ்வறுவகையாய உட்பகைகளை முன்னர் ஒரு தலையாக வென்றொழித்தல் வேண்டும்
என்று கூறினான், (எ - று.)

     அறுவகைப் பகையாவன : காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மயக்கம் செருக்கு பகை
என்பன. இவை தன்னுள்ளத்தே தோன்றித் தன்னையே அழிப்பன என்பான், தங்கணே
பன்னின், என்றான்.
 

( 51 )

 
624.

தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை 2வேறல் 3பிறர்க்கரி தாதலான்
மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடு 4நன்றரோ  

     

 

     (பாடம்) 1. மற்றவை. 2. வென்றி. 3. பெறற்கரி. 4. கின்றதே.