பக்கம் : 438 | | | 628. | இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப் புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட் 1டிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே. | (இ - ள்.) மகிழ்ச்சியுள் மதி மைந்துறும்போது - தனது மனத்தின்கண் ணிறைந்த மகிழ்ச்சி காரணமாக அறிவு வலியுறும்பொழுது, இகழ்ச்சியிற் கெடுவார்களை எண்ணுக என - முற்காலத்து அங்ஙனம் மைந்துற்றதனாலாய சோர்வால் உலகில் கெட்டுப் போனவர்களை எண்ணிப் பார்த்திடுக என்று, புகழ்ச்சி நூலுள் புகன்றனர் - புகழப்படுகின்ற மெய்ந்நூலில் சான்றோர் கூறிவைத்துள்ளனர், பூவினுள் - உலகினுள்ளே, திகழ்ச்சி செல் - புகழ் பரவிய, பொன் மணிமுடி மன்னனே! - பொன்னாலும் மணியாலும் புனைந்த மோலியையுடைய வேந்தனே!, ( ) புகழ்ச்சி நூல் - திருக்குறள். அதன்கட் புகன்றதாவது: “இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து“ (539) என்பது. இச் செய்யுளில் திருக்குறள் ஒன்றினை முழுதாகப் பெய்து அம் மெய்ந்நூலையும் புகழ்ச்சி நூலெனத் தேவர் புகழ்தல் காண்க. | ( 56 ) | அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல் | 629. | நெறியி னீதிக்க 2ணேரிவை 3யொப்பவு மறிதி நீயவை நிற்க வழன்றுநீ செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர் உறுதி யானுரைப் பானுறு கின்றதே. | (இ - ள்.) செம்பொன் முடி மன்ன - செம்பொன்னாலாகிய முடியை யுடைய வேந்தனே!, நெறியில் நீதிக்கண் நேரிவை - அரசியல் நடத்தும் வழியினும், அவர்க்கோதிய நீதியினும் நேர்மையாய் இவற்றையும், ஒப்பவும் நீ அறிவை - இன்னோரன்ன பிறவற்றையும் நீயே நன்கு அறிந்துள்ளாய், அவைநிற்க - ஆதலின் நினக்கு மிகைபட யான்கூறிய வாசகங்கள் அமைக, நீ அழன்று செறுதியேனும் - மன்னனே நீ என்னை (மிகைபடப் பேசினான் என்று) மனங்கொதித்துச் சீறுவாய் எனினும், ஓர் உறுதி - (உடன்பால் யான் வைத்த அன்புடைமையால்) உனக்கு உறுதி பயப்பதொரு செய்தி, யான் உரைப்பான் உறுகின்றது - யான் கூறும்படி நேர்கின்றது. (எ - று.)
| |
| (பாடம்) 1. திகழ்ச்சி செம்பொன், மகிழ்ச்சி செம்பொன். 2. மற்றிவை. 3. ஏற்பவும். | | |
|
|