பக்கம் : 439
 

     இவ்வாறு அரசியலறங்காட்டிய நிமித்திகன் பின்னர்த்தான் கூறப் போவதனைக் கூற
எண்ணி, அரசே! நீ செறுதி ஏனும் அமைச்சர்க்குரிய கடனாதல்பற்றி உனக்கு உறுதியாய
தொன்றனை யான் கூறத்தொடங்கினேன் என்றான் என்க. தலைமகன் வெகுண்டபோதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்றுரைத்தல் நல்லமைச்சர் கடனாதலின் அங்ஙனம்
கூறினான் என்க.
 

( 57 )

அச்சுவகண்டன் அங்ஙனமாயின்
அவ்வுறுதி யாதுகூறுதி எனல்

630.

என்ற லும்மிணர் வேய்முடி மாலையா
னன்று சொல்லுக வென்று நகைமணிக்
குன்ற மன்னதிண் டோள்மிசைக் குண்டலஞ்
சென்று மின்சொரி யச்செவி 1தாழ்த்தினான்.
 

     (இ - ள்.) என்றலும் - என்று சதவிந்து கூறக்கேட்டலும், இணர்வேய்
முடிமாலையான் - கொத்தாய் அலர்ந்த மலராலாய முடிமாலையை அணிந்துள்ள
அச்சுவகண்டன், நன்று சொல்லுக என்று - நல்லது நிமித்திகனே நீ கூறக்கருதிய
அவ்வுறுதிப் பொருளைச் சொல்வாயாக என்று கூறி, நகைமணிக் குன்றம் அன்ன -
விளங்குகின்ற மாணிக்க மலையை ஒத்த, தோள்மிசைக் குண்டலம் சென்று மின் சொரிய -
தன் தோளின் மேல் காதணியாகிய குண்டலம் சென்று ஒளிர்தலைச் செய்ய, செவி
தாழ்த்தினான் - செவியை ஒருபுறமாகச் சிறிது தாழ்த்துவானாயினான், (எ - று.)
அங்ஙனம் தாழ்த்தியது நிமித்திகனை இகழ்ந்தவாறென்க. அவ்வாறாயின் நிமித்திகனே
கூறுக, யான் அதனைக் கேட்குவல் எனச் செவி தாழ்த்தினான் என்க.
 

( 58 )

நிமித்திகன் கூறுதல்
631.

பூமி மேற்புரி சைம்மதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் 2காண்டியால்.  

     

 

     (பாடம்) 1. தாழ்ந்தனன், தாழ்த்தனன். 2. நீ கண்டாய்.