பக்கம் : 440 | | (இ - ள்.) பூமிமேற் புரிசை மதில் போதனம் நாம நன்னகர் - நிலத்தின்மேல் புரிசையென்னும் உறுப்பினையுடைய மதில்களாற் சூழப்பட்ட போதனம் என்னும், பெயரையுடைய நலம் சிறந்த நகரம் ஒன்று உளதன்றே, ஆளும் நகைமலர்த்தாமம் நீள்முடியான்றன் - அந் நகரின்கண் வீற்றிருந்த ஆட்சி செய்யும் விளக்கமுள்ள மலர்மாலையை அணிந்துள்ள நீண்ட முடிமன்னனாவான் பயாபதியின், புதல்வர்கள் காமவேள் அனையார் உளர் காண்டி ஆல் - மகார்களாவார் உருவநலத்தால் மன்மதனையே ஒப்பர், விசயன் திவிட்டன் என்பார் இருவர் உளராதலை நீ அறிவாயன்றே, (எ - று.) உத்தரசேடி மலைமேலதாகலின் போதனத்தைப் பூமிமேலது என்றான், ஆல் : அசை. பயாபதி மன்னனையும் அவன் மக்களையும் அச்சுவகண்டன் பண்டே அறிந்துளன் என்பது தோன்றக் காண்டியால் என்றான் என்க. | ( 59 ) | இதுவுமது | 632. | ஏந்து தோளவ ருள்ளிளை 2யானமக் காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப் போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ. | (இ - ள்.) ஏந்து தோளவருள் - உயர்ந்த தோளுடைய அவ்விருவருள் வைத்து, இளையான் நமக்கு ஆய்ந்த தொல்பகையாகும் என்றே - இளையவனாகிய திவிட்டன் என்பான் ஆராய்ந்தறிந்ததொரு பழம் பகைவன் ஆவான் என்று, உறப்போந்து ஓர் புன்சொல் நிமித்தம் புறப்பட - பொருந்துமாறு வந்து ஒரு புல்லிய சொல்லாகிய நிமித்தம் வெளிப்பட்டதாக, வேந்தயான் மனத்தின் மெலிகேன் - அரசே அஃதறிந்த பின்னர் யான் என் மனத்துள்ளே மிகவும் வருந்தி மெலியா நின்றேன், (எ - று.) திவிட்டன் தொல்பகைவன் என நிமித்தம் புறப்பட்டது தீமையாதலின் புன்சொல் நிமித்தம் என்றான். யான் மனத்தின் மெலிகேன் என்றமையால், அவனால் உனக்கு அழிவு நேரும் என்பதைக் குறிப்பாற் கூறினன். | ( 60 ) | அச்சுவகண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல் | 633. | முத்த நீண்முடி யான்முன்ன மற்றதற் கொத்த 2வாறுணர்ந் தீயென வென்செயு மைத்த கைமனத் தன்மனித் தான்னெனக் கைத்த லங்கதிர் வீச மறித்தனன். | | |
| (பாடம்) 1. யான் மகன். கின்றதோ. 2. வாறறிந் தீகென, வாறறிந்தீ யென. | | |
|
|