(இ - ள்.) முத்த நீண்முடியாய் - முத்துமாலை சூட்டப்பெற்ற நீண்ட முடியுடைய வேந்தே!, முன்னம் மற்றதற்கு ஒத்தவாறு உணர்ந்தீ!, என - அப்பகை மூள்வதற்கு முன்னரே அதனை வெல்வதற்கேற்றதொரு வழியை நீ அறிந்து கடைப்பிடித்தருள்க என்று நிமித்திகன் கூறினானாக, என் செய்யும்! மைத்தகை மனத்தான் மனித்தன் என - அச்சுவகண்டன், ஆ, என்னை மைபோலும் இருள் மனத்து எளிய மானுடன் ஆகிய அத்திவிட்டன் செய்யக்கிடந்த தென்னை! என்று கூறி, கைத்தலம் கதிர்வீச மறித்தனன் - கைகளின் அணிகள் ஒளிக்கற்றை காலுமாறு தடுத்தான், (எ - று.) தான் விஞ்சையன் ஆகலின் மனித்தன் என இகழ்ந்து கூறினான். உணர்க என்னும் முன்னிலை ஏவல் வினைக்கண் ஈ அந்நிலை மரபின் மெய்யூர்ந்து உணர்ந்தி என வந்தது. |
(இ - ள்.) நகைகொள் நீள்முடி நச்சரவம் அனான் - துலங்குகின்ற நிண்ட முடியையுடைய விடப்பாம்பை ஒத்த அச்சுவகண்டன், மிகையின் வந்த விச்சாதரவேந்தர் தம் தொகையை வென்ற - தங்களை வலிமுதலிய வற்றால் மிகைப்பட மதித்து எம்பால் போர்க்கு வந்து எதிர்ந்த விச்சாதர மன்னர்களுடைய கூட்டத்தையும் பொருது வெற்றி எய்திய, என் தோள் உளவா - என் தோள்கள் எனக்குத் துணையாக இருப்பவனாக, பிற பகை இனிப் படர்ந்து என் செயும் - அவ்விச்சாதரர் அளவும் வலியற்ற வேறு மானிடப்பகை எம்பால் வந்து எம்மை யாது செய்யவல்லும்?, என்றான் - என்று எள்ளிக்கூறினான், (எ - று.) விச்சாதரரிற்றாழ்ந்த மானிடப்பகை என்பான் பிறபகை என்றான். |