பக்கம் : 443
 

     (இ - ள்.) வேக மாருதம் வீச - விரைதலையுடைய பெருங்காற்று வீசியடியா நிற்ப,
விண்பால் சிறு மேகசாலம் விரிந்து எதிர்செல்லுமோ? - விசும்பின்கண் சிறிய முகிற்கூட்டம்
பரந்து அக்காற்றின் எதிராகச் செல்ல வல்லுமோ!, ஏகமாய என்சீற்றம் அஞ்சாது எதிர்ஆக
- ஒப்பில்லாத என்னுடைய சினத்திற்கு அஞ்சாமல் எனக்கு எதிராக, மானுடர்தாம்
அசைகிற்பவோ! - மனிதர்களோ இயங்கவல்லுநர் ஆவர்! (எ - று.)
சூறைக் காற்றை எதிர்த்து முகில் செல்ல வியலாததுபோல் என்னை மானிடர் எதிர்க்க
வல்லுநர் அல்லர் என்றான் என்க.
 

( 65 )

இதுவுமது

638.

1குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு 2மேன்
மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு
நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே.
 

     (இ - ள்.) இந்திரன் குலிசம்கொண்டு பணிக்குமேல் - தேவர்கோமான் தனது குலிசம்
என்னும் படையைக் கைக்கொண்டு ஏவுவானாயின், மலையின் மாசிகரங்களும் வீழ்த்திடும் -
மலையின்கண்ணுள்ள பெரிய சிகரங்களையும் அக்குலிசம் அரிந்து தள்ளுதல் ஒழியாது,
நிலைய வெஞ்சுடர் ஆழி நினைப்பனேல் - நிலைத்த வெவ்விய ஒளியையுடைய என்
சக்கரத்தைப் பணிக்க யான் எண்ணுவேனாயின், தொலைவில் வானவர் தோளும்
துணிக்குமே - இப்பேதை மானிடர் கிடக்கப் பகைவர்க்குத் தோலாத அமரர்களுடைய
வலிமை மிக்க தோள்களையும் வெட்டி வீழ்த்தும், (எ - று.)

     வானவர் தோளும் துணிக்கு மென்றான் மானிடரைப் பெரிதும் இகழ்தற்கு; இந்திரன்
குலிசம் மலைகளின் சிறகுகளை எளிதாகத் துணிப்பது போன்று என் ஆழி பகைவரை
எளிதாக அழிப்பது திண்ணம் என்றான் என்க.
 

( 66 )

இதுவுமது
639.

விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ
ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
யச்ச மின்றிநிற் பாரந் நமித்தநூல்
பொச்ச 3லாங்கொல் புலந்தெழு நீர்மையாய்.
 

     

 

     (பாடம்) 1. குலிகம். 2. மென். 3. வாங்கொல்.