தீதறு தென்மலை என்றது. தன்பால் வாழ்வோருடைய அழுக்கு நீக்கும் கடவுட்டன்மையுடைய தக்கிண சேடியை என்க. |
( 79 ) |
அந்நகரச் சிறப்பு |
652. | செஞ்சுடர் மின்னொளி 1சென்று பரந்திட மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம் விஞ்சையர் செல்வம் 2வெறுத்தன ரன்றே. |
(இ - ள்.) செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட - தம் செவ்விய சுடருதலுடைய மின்னினது ஒளி திசைகளிலே சென்று பரவ, மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை - முகில்களோடு பொருந்தியுள்ள சிறந்த மணிகளால் ஆகிய மாளிகைகள், வெஞ்சுடர் வீதி விலக்குவகண்டு - வெவ்விய ஞாயிற்று மண்டிலம் செல்லும் வழியைத் தடைசெய்து நிற்றலைக் கண்டு, விஞ்சையர் செல்வம் வெறுத்தனர் அன்றே - அத் தூதுவர்கள் விஞ்சையராகிய தம்மவர் எய்தியுள்ள செல்வமும் இப்போதனத் துற்ற செல்வத்தை நோக்க ஒரு செல்வமாமோ என வெறுப்புற்றனர், (எ - று.) அப் போதன நகரத்தின் அழகு வளம் முதலியவற்றை நேரிற்கண்ட தூதர்கள் தம்முடைய சிறந்த விஞ்சை நகரங்களும் இத்துணைச் சிறப்புடையன அல்ல என்று வியந்தனர் என்க. |
( 80 ) |
இதுவுமது |
653. | மூரி முழாவொலி விம்மி முரன்றெழு காரி 3மிழார்கலி யான்மயி லாலுவ சோரி முழாவிழ விற்றெரு 4துற்றபின் சீரி மிழாற்பொலி 5வெய்தினர் சென்றே. |
(இ - ள்.) மூரிமுழா ஒலிவிம்மி - பெரிய முழாவென்னும் தோற்கருவி யின் ஒலி மிகுதலாலே, முரன்று எழு கார் இமிழ் ஆர்கலியான் - ஒசையுடனே வெரீஇ எழுகின்ற முகில்களின் இடி முழக்கத்தாலே, மயில் ஆலுவ - மயில்கள் களித்து ஆடாநிற்கும், சோரிமுழா விழவில் - குருதிப்பலி கொள்கின்ற முரசம் முழங்குதற்குக் காரணமான |
|
|
(பாடம்) 1. சென்றுதிபாத்திட. 2. விடுத்தனர். 3. மிழாரொலி. 4. வாயபின். 5. வெய்திரை |