பக்கம் : 454
 

     (இ - ள்.) வண்டுபட - வண்டினம் மொய்த்தலாலே, குவளை - குவளை அரும்பு,
பிணைநக்கு அலர் - பிணிப்பு நெகிழ்ந்து அலர்தலானே, விண்ட - துளித்த, மது - தேனை,
பருகி - உண்டு, களியின் மதர்கொண்ட நடை - அத்தேன் வெறியாலே செருக்குற்ற
நடையினை உடையவாகிய, களியன்னம் - மகிழ்ச்சியுடைய அன்னப்பறவைகள்,
இரைப்பதுஓர் - ஆரவாரித்தற்கிடமான ஒப்பற்ற, மண்டுபுனல் - பெருகுகின்ற நீரையுடைய,
அகழியையுடைய, புரிசைப்பதி - மதில்சூழ்ந்த அரண்மனையை, சார்ந்தார் - எய்தினார்,
(எ - று.)

     பிணை - பிணிப்பு. இதழ்களின் பிணிப்பென்க. நகுதல் - ஈண்டு நெகிழ்தன்
மேனின்றது. அலர்தலான் விண்ட என்க. மதர் - செருக்கு. புனல் - ஈண்டு அகழி
அத்தூதுவர் - அன்னம் ஆரவாரிக்கும் அகழி சூழ்ந்த மதிலையுடைய அரண்மனையை
எய்தினர் என்க.
 

( 85 )

 
658.

கோயின் முகத்தது 1கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
2ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து 3மடுத்திது சொன்னார்.
 

     (இ - ள்.) கோயின் முகத்தது - அவ் வரண்மனையின் முன்பகுதியிலே
பொருந்தியதாகிய, கோடுஉயர் சூளிகை - சிகரங்கள் உயர்ந்துள்ள சூளிகை பொருந்தியதும்,
வேய்இல் முகத்து அதின் - வேயப்பட்டதும் அரண்மனை முகப்பின்கண் உள்ளதுமாகிய
அச்சூளிகையின்கண், மாமழை வீழ்வது - பெரிய முகில்கள் தவழப்படுவதும், ஞாயில்
முகத்த - ஞாயில் என்னும் உறுப்பை உடையதும், நகைத்திரள்முத்து அணி - விளங்குகின்ற
உருட்சியையுடைய முத்தினாலே அழகு செய்யப்பட்டதும் ஆகிய, வாயில் முகத்து மடுத்து -
அத்தலைவாயிலின் கண்ணே எய்தி, இது சொன்னார் - இம்மொழிகளை இயம்பினர்,
( )
     அத்தூதர்கள் வாயிலிடத்தே எய்திப் பின்வருமாறு கூறினர் என்க. ஞாயில் -
மறைந்திருந்து அம்பு ஏவுதற் பொருட்டு மதிலகத்தே அமைப்ப தோர் உறுப்பு என்க.
வேய் இல் முகத்து அதின் எனக் கண்ணழித்துக் கொள்க.
 

( 86 )

வாயிலோனுக் குரைத்தல்

659.

வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
4னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்

 

 

     (பாடம்) 1. கொண்டுயர். 2. நாயின். 3. மடுத்துதி. 4. ஆய்தலில்.