பக்கம் : 455
 
 

வாய்தலி 1னின்றனர் வந்தென மன்னன்முன்
நீதலை 2சென்றுரை நிள்கடை காப்போய்.
 

     (இ - ள்.) நீள்கடை காப்போய் - நீண்ட வாயிலைக் காக்கும் காவலனே!.
மன்னன்முன் நீ தலைசென்று - உங்கள் வேந்தனாகிய பயாபதியின்பால் நீ சென்ற,
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் - உச்சியில் மூங்கில்கள் நீண்டுள்ள
வெள்ளிமலையின் அரசனான, ஓய்தலில் ஒண்சுடர் ஆழியினான் தமர் - ஒழிவில்லாது
ஒளிகாலும் ஆழிப்படையை யுடைய அச்சுவகண்டனைச் சார்ந்த தூதர்கள், வந்து வாய்தலில்
நின்றனர் என - வந்து நம் அரண்மனை வாயிலில் நின்றுளர் என்று, உரை - அறிவிப்
பாயாக( )
     அரண்மனை வாயிலை அடைந்த அத்தூர்கள் வாயில்காவலனை நோக்கிக்
கூறுகின்றவர் “ஆழியினான் தமர் நம் வாயிலில் வந்து நின்றார் என்று உன்னரசற்கு உரை“
என்றார் என்க. தூதருடைய கூற்றில் அதிகார ஆணவம் தோன்றுதல் காண்க.
 

( 87 )

பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்

660.

என்றவர் கூற விருங்கடை காவல
னன்றென நாறொளி நீண்முடி யானடி
3மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
4ஒன்றிய 5போதக என்ப துரைத்தான்.
 

     (இ - ள்.) என்றவர்கூற - என்று அத்தூதர்கள் கூறியவுடனே, இருங்கடை காவலன்
- பெரிய அரண்மனை வாயில்காப்போன், நன்றென - நல்லது அங்ஙனமே செய்வேன்
என்று, நாறு ஒளி நீண்முடியான் அடி - தோன்றாநின்ற சுடரையுடைய நீண்ட
முடியையுடைய பயாபதி மன்னன் அடியில் சென்று, மன்ற வணங்கி - மிகத்தொழுது நின்று,
மொழிந்தனன் - அத்தூதர்கள் வரவையுரைத்தான், மன்னனும் - அப்பயாபதி மன்னனும்,
ஒன்றிய போதக என்பது உரைத்தான் - அவர் என் முன்னிலையிற் பொருந்தப் புகுவாராக
என்று உரைத்தான், (எ - று.)

     போதக : வியங்கோள். என்று அத்தூதர் கூறியவுடன், அவ்வாயிலோன் நன்றென
நீண்முடியான் அடி மன்ற வணங்கி, அவர் கூறிய கூற, மன்னனும் அவர் இங்குப் போதக
என்றனன், என்க.
 

( 88 )

தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்

661.

பொன்னவிர் நீள்கடை காவலன் போக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி

     


     (பாடம்) 1. நின்றவர். 2. நின்றுரை. 3. சென்று. 4. ஒன்றின. 5. போதக.