பக்கம் : 456 | | | மன்னவன் வார்கழல் வாழ்த்தி மடக்கிய சொன்னவி 1லோலைகை தொழுதன 2ரீந்தார். | (இ - ள்.) பொன்னவிர் நீள்கடைகாவலன் போதக என்னலின் - பொன்னொளி சுடரும் நீண்ட வாயிலைக் காக்கும் அவ்வாயிலோன் மீண்டுவந்து, தூதர்களை நோக்கி நீயிர் புகுதுக என்று கூறியவுடன், எய்தி - அத்தூதுவர்கள் அரசன்பாற் சென்று, இலங்கொளி நீண்முடி மன்னவன் வார்கழல் வாழ்த்தி - விளங்குகின்ற ஒளியையுடைய நீண்ட முடிமன்னனாகிய பயாபதியின் நெடிய கழல்கட்டிய அடிகளை வாழ்த்தி வணங்கி, கைதொழுதனர் மடக்கிய சொல் நவில் ஓலை ஈந்தார் - கைகூப்பித் தொழுது சுருளிடப் பட்ட தூதோலையை அரசன் கையிற் கொடுத்தார், (எ - று.) வாயிலோன் அரசன் உடன்பாட்டை உரைத்தலும் தூதர் அரசன்பால் எய்தி அவன் கழல் வாழ்த்தி ஓலையைத் தொழுது ஈந்தார் என்க. | ( 89 ) | அந்த ஓலையைப் படித்தல் | 662. | வாசகன் மற்றது 3வாசினை செய்தபின் மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை தேசக மூசிய 4வாழியன் சீர்த்தம ரோசைக ளோலை 5கொ டொப்ப வுரைத்தார். | (இ - ள்.) வாசகன் மற்றது வாசினை செய்தபின் - ஏடு படிப்போன் அவ்வோலையை அரசன் கேட்ப வாசித்த பின்னர், மாசகல் நீள்முடி மன்னவன் முன்னிவை - குற்றந்தீர்ந்த நீண்ட முடியையுடைய பயாபதி வேந்தன் முன்னர்ப் பின்வருவனவற்றை, தேசு அகம் மூசிய ஆழியன் சீர்த்தமர் - அகத்தின் கண்ணே ஒளிக்கற்றைகள் மொய்த்த சக்கரப் படையையுடைய அச்சுவகண்டனுடைய சிறந்த தூதர்கள், ஓசைகள் ஓலைகொடு ஒப்ப உரைத்தார் - அத்திருவோலையைக் கருத்திற்கொண்டு தம் வாயினாலும் செய்திகள் சில உரைப்பாராயினர், (எ - று.) வாசினை - படித்தல். அவ்வோலை வாசகத்தை ஏடு படிப்போன் அரசனுக்குப் படித்துணர்த்திய பின்னர். அத்தூதர்கள் பின்வருமாறு கூறினர் என்க. ஓசைகள் - மொழிகள். ஓலைகொடு - ஓலைவாசகத்தைக் கருத்திற் கொண்டு அதற்கு ஆக்கமான சில செய்திகளைச் சொன்னார் என்க. | ( 90 ) |
| (பாடம்) 1. ஓலையும். 2. ஆய்ந்தார். 3. வாசனை. 4. வாழியனான் தமர், வாழியினான்தமர். 5. கொண். | | |
|
|