பக்கம் : 457
 

இதுமுதல் 3 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி

663.

ஊடக மோடி யெரிந்தொளி முந்துறு
மாடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் 1தோடக மெல்லடி
2நாடக ராயிர 3நாரியர் தம்மையும்.
 

     இது முதல் மூன்று செய்யுள் குளகம்

     (இ - ள்.) அகம் ஊடு ஒளி ஓடி எரிந்து முந்துறும் ஆடகம் - அகத்தினூடே
ஒளிபாய்ந்து மிளிர்ந்து திகழும் பொன், ஆயிர கோடியும் - ஓர் ஆயிரங்கோடியும், அல்லது
- அன்றியும், சூடக முன்கையர் அகம்தோடு மெல்லடி - வளையலணிந்த
முன்கையையுடையாரும் அகவிதழ்போன்ற மெல்லியல் அடிகளையுடையாரும் ஆகிய,
ஆயிரம் நாடக நாரியர் தம்மையும் - ஓராயிரம் கூத்தியல் அறிந்த விறலியரையும்,
(எ - று.)
     அல்லது எனல் வேண்டிய உம்மை தொக்கது.
 

( 91 )

 
664.

தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி
4ரெண்டர ளம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரள் முத்தொடு காழகி 5லந்துகில்
பண்டரு 6நீரன வும்பல பண்டமும்.  
 

     (இ - ள்.) தெண்டிரை சிந்திய சங்கொடு - தெளிந்த திரையெறி கடல்தந்த
சங்குகளோடு, செங்கதிர் பவழக்கொடி எண்தரளம் ஈட்டமும் - சிவந்த ஒளியையுடைய
பவழக்கொடியும் ஆராய்ந்த முத்துமாகியவற்றின் குப்பையும், கண்டிரள் முத்தொடு -
மூங்கில் முதலியவற்றின் கணுக்களிலே தங்கித் திரண்ட முத்துக்களோடு, காழ் அகில் -
நிறமமைந்த அகிலும், அந்துகில் - அழகிய ஆடையும், பண்தரு நீரனவும் - இசைக்
கருவிகளும், பல்பண்டமும் - இன்னோரன்ன வேறு பல பண்டங்களும், (எ - று.)

     எண்டரளம் கடல்படுமுத்தென்றும் கண்டிரள்முத்து மூங்கில் கரும்பு முதலியவற்றில்
விளைந்த முத்தென்றும் கொள்க. பண்டரு நீரன என்றது யாழ்முழவு முதலிய இசைக்
கருவிகளை.

( 92 )

 
665.

வெண்கதிர் 7முத்தகில் வேழ மருப்பொடு
கண்கவர் சாமரை வெண்மயி 8ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் 9வேண்டுமி
தொண்சுட ராழியி னானுரை யென்றார். 

 

     (பாடம்) 1. பாடக. 2. மங்கையர். 3. நாடக மங்கையராயிரர். 4. ஒண்டிர.
5. லுந்துகில். 6. நீருள. 7. முத்தொடு. 8. ரீட்டந். 9. வேண்டும, வேண்டு.