பக்கம் : 460 | | | பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்க மாட்டா 1மெலிபவால் வெளிய நீரார். | (இ - ள்.) மதியினை மலரச்சூழ்ந்து - அறிவை விரிவுறவைத்து ஆராய்ந்து, வருந்தித்தாம் படைக்கப்பட்ட - மனம்மொழி மெய்களால் தாமே வருந்தி ஈட்டப்பட்ட, நிதியினை நுகர்தும் என்று நினைத்து இருந்த போழ்தில் - பொருள்களை இனி அநுபவிப்போம் என்று எண்ணி இருக்கின்ற பொழுதில், பதியினைக் கலக்கிச்சென்று பறித்துத் தாம் - அங்ஙனம் எண்ணியிருந்தாருடைய உறையுள் முதலியவற்றையும் நிலை குலையச் செய்துபோய் அவர் வருந்தியீட்டிய நிதிக்குவியல்களையும் பிடுங்கி, பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்கமாட்டா - ஏதிலாராய பிறர்பால் கொடுக்கின்ற தீய போகூழை அகற்ற இயலாத வராய், வெளிய நிரார் மெலிபவால் - பேதையர் வருந்தா நிற்பர், (எ - று.) மாட்டா : துவ்வீறு தொக்கது, ஆல் : அசை. ஒருவன் அறிவாலே ஆராய்ந்து உடல் வருந்தி ஈட்டிய பொருளை இனி நுகர்வாம் என்றிருக்கும்போது பகைவர் புக்கு அவன் உறையுள் முதலியவற்றைக் குலைத்து அவன் பொருளை ஏதிலார்க்குக் கொடுக்கும் படி செய்வது போகூழே ஆகும். அப்போகூழை மாற்றலாற்றாது பேதைகள் வருந்தா நிற்பர் என்பதாம். | ( 96 ) | அந்த ஓலையைப் படித்தல் | 669. | ஒளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம் தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா மளியமோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண். | (இ - ள்.) ஒளியினால் பெரியன் ஆய ஒருவனுக்கு - புகழுடைமையால் சிறந்த பெரியோன் ஒருவனை அண்மி அவனுக்கு, உவப்பச்செய்து - மகிழ்ச்சியுண்டாகும்படி அவன் ஏவியவற்றை நன்குசெய்து, ஓர் அளியினால் வாழ்தும் என்னும் அவாவினுள் - அவன் நம்பாற்காட்டும் ஓர் அருளாலே யாம் இன்புற்று வாழ்வாம் என்னும் பேராசையினுள் அழுந்துகின்றாம் - அழுந்தாநின்றோம், நாம் இதனைத் தெளியக்கண்டும் - நாம் இதற்குரிய காரணத்தை நன்கு தெரிந்துவைத்தும், செய்வினைத் திறங்கள் தன்மைகளை ஆராய்கின்றோமில்லை, அறிவினாற் சாலப்பெரியமேகாண் - நாம் அறிவுடைமையால் மிகமிகப் பெரியமே போலும், அளியமோ அளியம் - யாம் மிகவும் அளிக்கத்தக்கவர்களே ஆகின்றோம், (எ - று.) | |
| (பாடம்) 1. மெலிபவ ரெளிய நீரார். | | |
|
|