பக்கம் : 462 | | | கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் 1துய்ப்பக் கொண்டு சென்றுறு மிறைவர்க் கெம்வா யின்னுரை 2தெரிமி னென்றான். | (இ - ள்.) நிலமன்னன் - பயாபதி அரசன், என்று தன் மனத்தின் எண்ணி - இவ்வாறு தன்மனத்தினுள்ளே சிந்தனை செய்து, இலங்குகோற் கையராகி நின்ற கேசரரை நோக்கி - விளங்குகின்ற கோல்பிடித்து நிற்கின்ற விச்சாதரராகிய தூதர்களைப் பார்த்து, அனைய சொன்னார்க்கு - அங்ஙனம் கூறிய நும் அரசனுக்கு, யாம் ஒன்றி - யாம் மனம் பொருந்தி, இங்கண் உள்ளது ஒருப்படுத்து உய்ப்பக் கொண்டு சென்று - இவ்விடத்தில் உள்ள பொருளை ஒருங்குதிரட்டிச் செலுத்த அவற்றை நீயிர் கைக் கொண்டு போய், நும்இறைவர்க்கு எம்வாய் இன்னுரை தெரிமின் என்றான் - நும் அரசனாகிய அச்சுவகண்டனுக்கும் யாங்கூறிய இனிய முகமன் மொழிகளைக் கூறுங்கோள் என்று சொன்னான், (எ - று.) இவ்வாறு சிந்தித்துத் தூதரைப் பார்த்துப் பயாபதி வேந்தன் கூறுகின்றவன். தூதர்களே அவ்வாறு கட்டளையிட்ட அச்சுவகண்ட மன்னனுக்கு; யான் ஈண்டுள்ள பொருள்களைத் திரட்டித் தருவல் நீயிர் அவையிற்றை அம்மன்னன்பாற் சேர்த்து என் வணக்க வுரையையும் கூறுங்கோள் என்றான் என்க. | ( 99 ) | பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைதல் | 672. | ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் 3கூறி வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற் காளைக ளிதனைக் கேட்பிற் 4கனல்பவா லவரை யின்னே மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான். | (இ - ள்.) ஆளிகட்கு அரசன் அன்ன அரசர்கோன் - சிங்கங் களுக்கும் அரசாகிய சிங்கத்தை ஒத்த பயாபதி மன்னன், அனையகூறி - தூதரிடத்து அவ்வுரைகளைச் சொல்லி, வாளிவிற்றடக்கை வெம்போர் - அம்புவிடும் விற்படை பிடித்த பெரிய கைகளையுடையவரும். வெவ்விய போரிக்கண் வல்லவரும் ஆகிய, காளைகள் இதனைக் கேட்பில் கனல்பவால் - காளைபோன்றவராகிய என்மக்கள் விசய திவிட்டர்கள் இச்செய்தியைக் கேட்பார்களாயின் வெகுள்வார்கள் ஆதலால், இவரையின்னே மீளுமாறு அமைப்பன் என்று - இத்தூதுவர்களை (அவர்கள் அறியு முன்னரே) இப்பொழுதே திரும்பிச்செல்லுமாறு செய்குவல் என்று நினைத்து, வேண்டுவ விதின் ஈந்தான் - அவர்கள் செல்வதற்கு வேண்டியவற்றை முறைப்படி வழங்கினான், (எ - று.) | |
| (பாடம்) 1. துய்ய. 2. கொடுமின். 3. கூவி. 4. கனல்பவர். | | |
|
|