பக்கம் : 463
 

இளங்கன்று பயம் அறியாதென்ப வாகலின் பின் விளைவு தேறாது மக்கள் வெகுள்வர்;
அவரறியாமலே யான் இத்தூதர்பாற் றிறை நல்கி இவரைச் செலுத்துவல் என்று கருதிச்
செலுத்தற்பால பொருண் முழுதும் செலுத்தினான் என்க.
 

( 100 )

இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒருதொடர்,
பயாபதி திறை நல்குதல்
673.

செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு
லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென 1விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்.

 

     (இ - ள்.) செய்யவாய் - சிவந்த வாயையும், பசும்பொன் ஓலை - பசிய
பொன்னாலாகிய காதணியையும், சீறடி - சிறிய அடிகளையும், பரவை அல்குல் - பரந்த
குய்யத்தடத்தையும், ஐயநுண் மருங்குநோவ அடிக்கொண்ட குவவுக்கொங்கை - உண்டோ
இல்லையோ என்று ஐயுறுதற் கேதுவாய் நுணுகிய இடை வருந்துமாறு அடியிட்டுத்திரண்டு
பருத்த கொங்கைகளையும், வெய்யவாய் - கொடியனவாய், தண்ணென் நீலம் விரிந்தென
விலங்கி நீண்ட மையவாம் கண் - குளிர்ந்த நீலோற்பலம் மலர்ந்தாற் போன்ற தோற்றத்
தவாய் அகன்று நீண்டு மை தீட்டப்பட்ட கண்களையும், மழைக்கூந்தல் - மழைபோன்ற
அளகக் கற்றையையுமுடைய; மகளிரை வருக என்றான் - மகளிர்கள் வருவாராக என்று
கட்டளையிட்டான், (எ - று.)
     வாயையும், ஓலையையும் சீறடியையும், அல்குலையும், கொங்கை யையும், கண்ணையும்
கூந்தலையும் உடைய நாடகமகளிரை வருக என்றான் என்க.
 

( 101 )

 
674.

அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்
2குணிமுழாப் பெயர்த்த பாணி 3குயிற்றுத லிலயங் கொண்ட
4கணிமுழா மருங்குற் கலிப்பிவை தலிர்த்துச் சென்றார்.

 

 

     (பாடம்) 1. விலங்கு. 2. கணி. 3. பயிற்றுதல் இலையங்.4. அனிமுழாமருங்கு பாடல் என்றிவை.