பக்கம் : 464 | | (இ - ள்.) அணி முழா அனைய தோளான் - அழகிய மத்தளமொத்த திரண்ட தோள்களையுடைய பயாபதி மன்னன், அருளியதறிந்த போழ்தின் - கட்டளையிட்ட செய்தியை அறிந்தவுடனே, மண்டல அரங்கின் - வட்ட வடிவமான நாடக அரங்கிடத்தே அங்கண் குணிமுழா - அழகிய கண்ணையுடைய ஆராய்ந்தறிதற்குக் காரணமான முழவென்னும் இசைக் கருவியினின்றும், பெயர்த்த பாணிகுயிற்றுதல் - எழீஇய இசைக்குப் பொருந்தத் தாளம் அமைத்தலையும்; இலயம் கொண்ட கணிமுழா மருங்குல் - சுதிசெய்யப்பட்டு நன்கு உணர்ந்தறிந்த முழாவின் பக்கத்தே, பாடற் கலிப்பு இவை - குரல் எழீஇப்பாடும் இன்னிசைப் பாடலால் உண்டாகும் முழக்கமாகிய இவற்றை எல்லாம், தவிர்த்துச் சென்றார்-ஒழித்துப் புறப்படுவார்களானார், (எ - று.) பயாபதியின் கட்டளையைப் பெற்ற மகளிர்கள் அரங்கிடத்தே குயிற்றுதல், பாடற்கலிப்பு இவையிற்றை அவித்துப் போயினர் என்க. | ( 102 ) | இதுமுதல் ஐந்து செய்யுட்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல் | 675. | மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை 1வான்குழா மென்ன வாங்கண் வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி 2வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச் செஞ்சுடர்ச் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் 3சேர்ந்தார். | (இ - ள்.) மஞ்சிடை மதர்த்த - முகில் வரவினால் களிப்புற்ற, மஞ்ஞை வான்குழாம் என்ன - மயில்களின் சிறந்த கூட்டம் போல, ஆங்கண் - அவ்விடத்தே, வெஞ்சுடர் விளங்கும் இடை நிலை மாடத்து - வெவ்விய ஒளியால் விளக்கமுற்ற இடைநிலை மாடத்தின்கண், வஞ்சிநுண் மருங்குல் நோவ - வஞ்சிக்கொடி போன்று மெலிந்துள்ள இடை வருந்தும்படியும், மணிநகைக் கலாவம் மின்ன - மணிகளால் ஆகிய சுடர்க்கற்றையுடைய காஞ்சிக்கோவை மிளிரவும், செஞ்சுடர்ச் சிலம்பு பாட - செவ்விய ஒளியை உடைய சிலம்புகள் இசைக்கவும், தேன்திசை பரவ - அளிகள் நான்கு திசைகளினும் இசையெடுத் தேத்தவும், விரவித் தோன்றிச் சேர்ந்தார் - கலந்து காணப்பட்டு வந்து சேர்ந்தனர். (எ - று) அம்மகளிர்கள் மயிலின் கூட்டம் போன்று இடைநிலை மாடத்தே வந்து கூடி, நோவ மின்னப் பாடப் பரவச் சேர்ந்தார் என்க. | ( 103 ) | | 676. | மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற் றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார் பாடலா னரம்பின் 4தெய்வம் படிவங்கொண் டனைய நீரா ராடலா லரம்பை யொப்பா 5ரவரிலா யிரரை யீந்தான். | | |
| (பாடம்) 1. க்குழா மென முகில் கண்போது, போழும். 2. வஞ்சி நுண். 3. சென்றார். 4. தெய்வப். 5. ஆயிர ரவரை. | | |
|
|