(இ - ள்.) அஞ்சுடர் வயிரப்பூணான் அருளினன் விடுப்ப - அழகிய ஒளிமிக்க வயிர அணிகலன்களையுடைய பயாபதி வேந்தன் தூதுவர்களுக்கு விடை முதலியன கொடுத்துவிட, ஆங்கண் - அப்பொழுது, விஞ்சையர் - விச்சாதரராகிய தூதுவர்கள், விமானந்தோற்ற - தங்கள் வித்தையாலே செய்த விமானங்கள் தோன்றாநிற்றலால்; மேல் அருங்கலங்கள் ஏற்றி - அவ்வி மானத்தில் பெறற்கரிய அணிகலன் முதலியவற்றை ஏற்றிய பின்னர், செஞ்சுடர்த் திலகம் செவ்வாய் மகளிரை - செவ்விய சுடருடைய திலகமிட்ட வரும் சிவந்த வாயினையுடையவரும் ஆகிய மகளிர்களையும், விமானம் சேர்த்திக் கஞ்சிகை மறைக்கும் போழ்தில் - வானவூர்தியில் ஏறச்செய்து திரையிடும்பொழுது, காளைகள் - விசய திவிட்டர்கள், அதனைக் கண்டார் - அச்செயலை நேரிற் கண்டு கொண்டனர், (எ - று.) பயாபதி கொடுத்த திறைப்பொருள்களை, விச்சாதரர் விமானத்தில் ஏற்றி மகளிரையும் விமானத் தேற்றித் திரையிட்டு மறைக்கும் அமயத்தே விசயதிவிட்டர் அவற்றைக் காணலுற்றனர், என்க. அத தூதர் இப்பொருளைக் கொண்டுபோதற்குத் தம் வித்தையாலே விமானங்களைப் படைத்துக் கொண்டனர் என்பதுபட விஞ்சையர் விமானந்தோன்ற என்றார் கஞ்சிகை - திரை. காளைகள் - விசயதிவிட்டர். |
(இ - ள்.) கல்நவில் வயிரத் திண்டோள் - கல்லைஒத்த உறுதியுடைய திண்ணிய தோள்களையுடைய, கடல்வண்ணன் - கடல்போன்ற நீலநிறத்தை யுடையவனான திவிட்டன்; என் இது விளைந்தவாற - இந்நிகழ்ச்சிக்குக் காரணம் யாது?, இத்தூதுவர் யாவர் - இந்தத் தூதுவர் யார்? என்று வினவ - என்று அங்கு நிற்கின்றவர்களைக் கேட்ப; யாரும் சொல் நவின்றுரைக்க மாட்டார் - அங்கு நிற்கின்றவருள் ஒருவரேனும் அக்கேள்விக்கத் துணிந்து |