பக்கம் : 47
 
 

தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலிவ தில்லையே.
 

     (இ - ள்.) நாமவேல் நரபதி - பகைவர்கட்கு அச்சத்தையுண்டாக்கு கின்ற
வேற்படையை உடைய அப்பயாபதி மன்னனானவன், உலகம் காத்த நாள் - அரசாட்சி
செய்து உலகத்தைப் புரந்த நாளிலே; காமவேள் - காமனுடைய; கவர்கணை - உள்ளத்தைக்
கவருங்கணை; கலந்தது அல்லது - நாட்டின் எல்லாவிடங்களினும் பொருந்திற்றேயல்லாமல்;
தாமம்வேல் வயவர் தம் - வெற்றிமாலையை அணிந்த வேற்படையை உடைய போர்
மறவர்களின்; தழல் - தீயைப் போன்ற; அம் கொல்படை - அழகிய கொலைக்கருவியானது;
நாமம் நீர்வரைப்பு அகம் - புகழ்மிக்க கடலை யெல்லையாகவுடைய உலகத்துயிர்களை;
நலிவது இல்லை - வருத்துதல் ஒரு சிறிதும் இல்லையாகும். (எ - று.)

     பயாபதி மன்னவன் அரசாட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் காமன்கணை
யாண்டும் பரவிற்றேயல்லாமல் வேறு பகைவர்களுடைய படைக்கலங்களானவை அந்நாட்டு
மக்களை வருத்தினவல்ல. பகைவர்கள் படையெடுத்து வந்து நாட்டை நலியாமைக்குக்
காரணம் பயாபதி மன்னனுடைய ஆற்றலும் கோடாத செங்கோல் நிலையுமேயாம். நாமநீர் .
அச்சந்தங்கிய நீர் என்றுரைப்பினுமாம்.

( 18 )

குடிகளை வருத்தி இறை கொள்ளாமை

54. ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் 1துலகினி னுவப்ப தில்லையே
2மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் 3றெவரையுஞ் செகுப்ப தில்லையே.
 
     (இ - ள்.) ஆறில் ஒன்று - அந்நாட்டு மக்கள் தங்கள் வருவாயின் ஆறில் ஒரு
பகுதியை; அறம் என - அரசனுக்குக் கொடுப்பது அறமாகும் என்று; அருளின்
அல்லது- அன்புடன் கொண்டுவந்து கொடுத்தால் அல்லாமல்; ஊறு செய்து - மக்களுக்குத்
துன்பஞ்செய்து; ஒன்று - ஒரு பொருளை; உலகினின் உவப்பது இல்லை - உலகிலே
விரும்பிப் பெறுவது இல்லை; மாறி நின்றவரையும் - பகையினால் மாறுபாடு
கொண்டுள்ளவர் களையும்;
 

     (பாடம்) 1. உலகினு ளுவப்ப தில்லையே, 2. மாறிநின்றெவரையும், 3. றவருயிர்.