எழுதி விடுத்த திறைப்பொருளை அவர்க்கு அஞ்சிக் கொடுத்து உயிர் வாழ்தலை விரும்பி இருந்து, வாழ்வதேல் - வாழ்கின்ற வாழ்வே ஆகுமாயின், பெரிது அழகிது - இவ்வாழ்க்கை மிகவும் அழகுடைத்து, (எ-று.) உழுதுஇறை செலுத்தி உண்டு வழிமொழிந்து வாழும் எளிய உழவர் வாழ்க்கைபோன்று, பகைமன்னர் எழுதிவிடுத்த திறைப் பொருளை நல்கி அஞ்சியிருந்து வாழும் அரச வாழ்க்கை, மிக நன்றென்றான் என்க. |
(இ - ள்.) மயரி மாந்தர்காள் - மதிமயக்கமுடைய தூதர்களே ! நாளின் - வரையறுக்கப்பட்ட காலத்தே, நுமக்கு - உங்களுக்கு, உந்திறை உவப்பத் தந்து - உமக்குரித்தாகிய திறைப் பொருளை நீவிர் மகிழும் அளவிற்றாகக் கொடுத்து, நாடாளுதும் - உங்கள் அருள் உண்மையால் அதுபற்றுக் கோடாகக்கொண்டு நாட்டை ஆள்வோம், அன்றெனில் - அங்ஙனமல்லா தொழியின், ஒழிதுமேல் - அரசியலிழுந்து அழிந்து ஒழிவோமாயின், எமதோளினும் - எம்முடைய மலையெனத் திரண்ட தோள்களாலும், தொடு கழல் வலியினாலும் - கழல்கட்டிய எம் தாள்களின் ஆற்றலானும், இவ்வாளினும் - இதோ என் கையகத்ததாகிய இக் கூர்வாளாலும, பயன்எனை - பயன் வேறென்னாம், (எ - று.) மயரிமாந்தர்காள், என்றது அச்சுவகண்டனை உளப்படுத்தித் தூதரை விளித்த தென்க. மாந்தர்காள் நீயிர் உவப்பத் திறைகொடுத்தால் வாழ்தும், அன்றெனில் ஒழிதும் எனில், எம்தோளானும், வலியானும், வாளானும் பயன் என்னாம். |