பக்கம் : 471
 

     தீயுடைய கண்களோடு கூடிய, அரவின் படமுடை மணிகொள - பெரும் பாம்பின்
படத்தின்கண் அமைந்த தலைமணியைக் கவர்ந்து கொள்ள, கருதிப் பார்ப்பதோர் -
நினைக்கின்றறை ஒப்பதோர், மடம் உடை மனத்தன் - அறியாமையுடைய மனத்தவன்
ஆதல் வேண்டும், (எ - று.)
மன்னன் மனத்தன் என்க.
     மயக்கமுடைய அச்சுவகண்டன் அரவின் மணிகொளப் பார்ப்பதோர் மடமுமடை
மனத்தன் என்றான் என்க.
 

( 114 )

 
687.

இருங்கலிப் படையனு மிகலி னாலுமெம்
மருங்கல மிவைபெறற் கரிய தாவதோர்
மருங்குள தெனினது மகளி ராற்சில
பெருங்கலந் தாங்கினாற் பெறலு மாகுமே. 

     (இ - ள்.) எம்அருங்கலம் இவை - எம்பாலுள்ள பெறற்கரிய அணிகலன்களாகிய
இவற்றை, இருங்கலிப் படையினும் - பெரிய முழக்கத்தையுடைய நும்படைகளைக்
கொண்டாதல், இகலினாலும் - எம்பால் பகைமை பூண்டு போர் செய்தலினாலாதல், பெறற்கு
அரியது - எய்துதல் இயலாது, ஆவதோர் மருங்குஉள தெனின் - இவற்றைப் பெறுதற்கு
ஒரு வழியுளதோ எனில், அது மகளிரால் சில பெருங்கலம் தாங்கினாற் பெறலும்
ஆகும்-அவ்வழியாவது கூத்தாடும் மகளிரோடு நும்மரசன் யாழேந்திப் பாடி
இரவலனாகவரின் அவற்றைப் பரிசிலாக எளிதிற் பெறலாம் என்பதே, (எ- று.)

     பெருங்கல மாவதுபேரியாழ்; அது கோட்டினதளவு
     பன்னிருசாணும், வணரளவுசாணும், பத்தரளவு பன்னிருசாணும்
     இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திவவும் உந்தியும்
     பெற்று ஆயிரங்கோல் தொடுத்து இயல்வது;
     (சிலப் - அடியார்க்குநல்லார் உரைப்பாயிரம்)

     இச்செய்யுளோடு “அளிதோ தானே பாரியது பறம்பு................. யானறிகுவனது
கொள்ளும் ஆறே, சுகிர்புரி நரம்பின் சீறியாழ்பண்ணி, விரையொலி கூந்தனும் விறலியர்
பின்வர, ஆடினர் பாடினர் செலினே, நாடுங் குன்றும் ஒருங் கீயும்மே‘ எனவரும்
புறப்பாட்டு நினைக்கத் தக்கதாம். (புறநா - 109). அரியது : பன்மை ஒருமை மயக்கம்.
 

( 115 )

 
688.

பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலா
மாழியால் வெருட்டிநின் றடர்த்திர் 1போலுமஃ
தேழைகா ளினியொழிந் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே.

   

 

     (பாடம்) 1. போலது.