பக்கம் : 473
 

     (இ - ள்.) தூதிர்காள் - தூதர்களே! இறைவளை மகளிர் போல் கழறி என்னை -
முன்கையில் வளையலணிந்துள்ள மகளிர்களைப்போல் பாரித்துப் பேசுதலால் யாது பயன்!
எங்குறை இது கூறுமின் சென்று - யாம் உங்கோமான்பாற் கூறும் எமது குறையொன்றனை
எம்பொருட்டு நீயிரே அவன்பால் சென்று சொல்லுக! (அக்குறையாதெனில்) திறையினை
மறுத்தவர் திறத்து - திறைப்பொருள் இறுக்க மறுக்கின்றவரிடத்தே, செய்வதோர்
முறையுளதெனின் - நீங்கள் இயற்றுகின்ற முறை பிறிதுளதாயின், அது முயன்று கொள்கவே
- அம்முறையானே நீயிர் முயன்று இயல்வதாயின் நுங்கள்திறைப் பொருளைக் கொள்க
என்பதே, (எ - று.)

     மகளிர்போன்று பலபடப் பேசிப் பயன் என்னை? தூதர்களே திறை தரமறுப்போர்
திறத்து நீயிர் மேற்கொள்ளும் செயலை மேற்கொண்டு வல்லிரேல் பெறுக!
இவ்வேண்டுகோளை நும் அரசற்குக் கூறுக என்றான் என்க.
 

( 118 )

 
691.

உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்
கட்கமழ் கோதையர் 1கணமு மீண்டது
வடகிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்
துட்கெனு மனத்தினர் தூத ரேகினார்.

     (இ - ள்.) உட்க ஆங்கு உரைத்தலும் - கேட்டோர் அஞ்சுமாறு திவிட்டன்
அங்ஙனம் கூறியவுடன், ஒளிர்பொன் மாழையும் - ஒளியுடைய அழகிய பொற்குவியல்களும்,
கள்கமழ் கோதையர் கணமும் - தேன் மணம் கமழ்கின்ற கோதையணிந்த மகளிர்
கூட்டமும், மீண்டது - விச்சாதரரிடத் தினின்றும் மீட்கப்பட்டன, தூதர் - அத்தூதர்களும்,
வட்கி - ஒளிகுன்றி, துட்கெனும் மனத்தினர் - துண்ணென அஞ்சிய நெஞ்சினராய், நம்
இறைவற் குத்தெவ் வலிது எனஏகினார் - நம் அரசனாகிய அச்சுவகண்டனுக்கு வலிமைமிக்க
பகைஒன்று தோன்றியுளது என்று நினைந்து வந்தவழியே மீண்டு ஏகினார், (எ - று.)

     மீண்டது, ஒருமைபன்மை மயக்கம். கேட்டோர் அஞ்சுமாறு நம்பி சினந்து இவ்வாறு
கூறியவுடன், தூதர் மனம் நடுங்கி, அச்சுவகண்டற்கு அரும்பகை ஒன்று புதிதாகத்
தோன்றியுளது என்று கருதிப் போயினர் என்க.
 

( 119 )

தூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்
692.

போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றொழுத லஞ்சி
யாகிய தறிந்து சூழு மரிமஞ்சு வவனைக் கண்டே
யேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட
தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி.

   

 

     (பாடம்) 1. கணமுன்.