திவிட்டன் தன்னிளமையால் விளைவறியாது விளம்பினான் ஆதல் வேண்டும். எனவே யான் ஒரு மாயத்தாலே திவிட்டனை அரிமாப்பாய்ந்து கொல்லுமாறு புணர்ப்பல் என்று கருதினான் என்க. |
( 123 ) |
அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல் |
696. | அன்னண மனத்தி னாலே 1யிழைத்தரி கேது வென்னு மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் 2றன்னைக்கூவிக் கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான். |
(இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, மனத்தினாலே இழைத்து - மனத்தின்கண் சிந்தனைசெய்து, அரிகேது என்னும் - அரிகேது என்னும் பெயரையுடையவனும், மின் அணங்கு உருவப்பைம்பூண் விஞ்சையன் தன்னைக்கூவி - ஒளிமிகுதியால் மின்னலையும் மழுங்கச் செய்யும் அழகிய பசிய அணிகலன்களையுடையவனும் ஆகிய விச்சாதரன் ஒருவனை அழைத்து, கல்நவில் தோளினாற்கு - கல்லைஒத்த தோளையுடைய அவ்வரி கேதுவிற்கு, கருமம் ஈது என்று காட்டி - அவன் செய்யவேண்டிய காரியம் இதுவெனக்கூறி, மாயமன்னும் ஓர்சீயம் ஆகென - மாயமே நிலைபெற்ற ஒரு சிங்கம் ஆகுக என்று, வகுத்துவிட்டான் - கூறி ஏவினான், (எ - று.) அரிமஞ்சு இவ்வாறு கருதி, அரிகேது என்பானை அழைத்துக் கருமம் உணர்த்தி, மாயச்சிங்கம் ஆகென விட்டான் என்க. கருமம் ஈதென்று காட்டி என்றது நீ இவ்வாறு திவிட்டனை ஏமாற்றி மெய்ச் சிங்கத்தோடு புணர்த்திவிடல் வேண்டும் என்று கூறிய சூழ்ச்சியை என்க. |
( 124 ) |
அம் மாயச்சிங்கத்தின் தன்மை |
697. | ஒள்ளெரி நெறிப்பட் 3டன்ன சுரியுளை மலைகண் போழும் வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க் கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான். |
(இ - ள்.) ஒள் எரி நெறிப்பட்டன்ன - ஒள்ளிய நெருப்புக்கற்றை ஒழுங்குற அமைந்தாற் போன்ற, சுரியுளை - சுருண்டடர்ந்த பிடரிமயிரையும், மலைகண் போழும் - மலையிடத்தைப் பிளக்கும் வலிமையுடைய, வள்ளுகிர் - வளைந்த நகங்களையும், மதர்வை - களிப்பையும், திங்கட்குழவி வாள் எயிற்று - பிறையை ஒத்த ஒளியுடைய பற்களையும், பைங்கண் உள்ளெரி உமிழ நோக்கி - பசியகண்களில் தீக்காலப் பார்த்து, உரும் என |
|
|
(பாடம்) 1. அழைத்தரி. 2. அவனைக். 3. டென்ன. |