பக்கம் : 476
 

     திவிட்டன் தன்னிளமையால் விளைவறியாது விளம்பினான் ஆதல் வேண்டும்.
எனவே யான் ஒரு மாயத்தாலே திவிட்டனை அரிமாப்பாய்ந்து கொல்லுமாறு புணர்ப்பல்
என்று கருதினான் என்க.
 

( 123 )

அரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்

696.

அன்னண மனத்தி னாலே 1யிழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் 2றன்னைக்கூவிக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்.
 

    (இ - ள்.) அன்னணம் - அவ்வாறு, மனத்தினாலே இழைத்து - மனத்தின்கண்
சிந்தனைசெய்து, அரிகேது என்னும் - அரிகேது என்னும் பெயரையுடையவனும், மின்
அணங்கு உருவப்பைம்பூண் விஞ்சையன் தன்னைக்கூவி - ஒளிமிகுதியால் மின்னலையும்
மழுங்கச் செய்யும் அழகிய பசிய அணிகலன்களையுடையவனும் ஆகிய விச்சாதரன்
ஒருவனை அழைத்து, கல்நவில் தோளினாற்கு - கல்லைஒத்த தோளையுடைய அவ்வரி
கேதுவிற்கு, கருமம் ஈது என்று காட்டி - அவன் செய்யவேண்டிய காரியம் இதுவெனக்கூறி,
மாயமன்னும் ஓர்சீயம் ஆகென - மாயமே நிலைபெற்ற ஒரு சிங்கம் ஆகுக என்று,
வகுத்துவிட்டான் - கூறி ஏவினான், (எ - று.)

     அரிமஞ்சு இவ்வாறு கருதி, அரிகேது என்பானை அழைத்துக் கருமம் உணர்த்தி,
மாயச்சிங்கம் ஆகென விட்டான் என்க. கருமம் ஈதென்று காட்டி என்றது நீ இவ்வாறு
திவிட்டனை ஏமாற்றி மெய்ச் சிங்கத்தோடு புணர்த்திவிடல் வேண்டும் என்று கூறிய
சூழ்ச்சியை என்க.
 

( 124 )

அம் மாயச்சிங்கத்தின் தன்மை

697.

ஒள்ளெரி நெறிப்பட் 3டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க
ணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்.
 

      (இ - ள்.) ஒள் எரி நெறிப்பட்டன்ன - ஒள்ளிய நெருப்புக்கற்றை ஒழுங்குற
அமைந்தாற் போன்ற, சுரியுளை - சுருண்டடர்ந்த பிடரிமயிரையும், மலைகண் போழும் -
மலையிடத்தைப் பிளக்கும் வலிமையுடைய, வள்ளுகிர் - வளைந்த நகங்களையும், மதர்வை
- களிப்பையும், திங்கட்குழவி வாள் எயிற்று - பிறையை ஒத்த ஒளியுடைய பற்களையும்,
பைங்கண் உள்ளெரி உமிழ நோக்கி - பசியகண்களில் தீக்காலப் பார்த்து, உரும் என

 

     (பாடம்) 1. அழைத்தரி. 2. அவனைக். 3. டென்ன.