பக்கம் : 480
 

     குமர! யாங்கள் வந்து நுந்தைபாற் றிறை பெற்றதும், நீ அவற்றை மறுத்துவிட்டதும்,
நீ கூறியதும், யாம் எம்மரசற்குக் கூற அவன் நக்கான் என்றார் என்க.
 

( 130 )

இதுவுமது

703. தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
விளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ
னொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா
னளியன் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்.
 

     (இ - ள்.) தளையின் விண்டு தேன் தயங்கிய தார் தடங்கொள் மார்ப -
கட்டவிழ்ந்து தேன் ததும்பி, விளங்கிய மலர் மாலையையுடைய அகன்ற மார்பனே!,
எங்கள்வாய் நீ இளையை என்பதும் கேட்டபின் - எங்கள் வாயிலாய் நீ ஆண்டான்
மிகவும் இளைஞன் என்னும் செய்தியையும் கேட்டறிந்த பின்னர், இறைவன் - எம் வேந்தன்
ஒளியும் ஆற்றலும் தன்கண் ஒன்று உள்ளதும் - தன்னுடைய சீர்த்தியும் வலிமையும்
இவற்றின் மேலாய்த் தன்பால் உள்ள ஒப்பற்ற வித்தையையும், நினையான் -
எண்ணாதவனாய், அளியன் - பாவம் நம்மால் அளிக்கத்தக்கவன், பிள்ளைதான் உரைத்த -
பிள்ளைமையால் கூறியவைகள், என்று - என்று தன்னுள் நினைந்து, அழன்றிலன்
அமர்ந்தான் - வெகுளியை அடக்கியவனாய் அமையலானான், (எ - று.)

     தான் : அசை. பிள்ளை - பிள்ளைமை. ஒன்றுள்ளது - எத்ததைய பகைவரையும்
அழிக்கவல்லதாகிய மாயவித்தை அவன்பாலுள்ளது, என்றபடியாம். ஒன்று - ஆழி
எனினுமாம்.
     நக்கவன் நீ இளையை என்பது யாம் கூறக்கேட்ட பின்னர், தன்பால் ஒளியும்
ஆற்றலும் உள்ளதும் கருதாது, அளியன்! பிள்ளைமை உரைத்தது என்று அழன்றிலன்;
அமர்ந்தான், என்றனர் என்க. இம்மொழியெல்லாம் தூதர்க்கு அரிமஞ்சு பயிற்றிவிட்டன
வென்க.
 

( 131 )

தூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்
704. அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு
ளுறையுங் கோளரி யொழிக்கலா மைக்குவந் தீயுந்
திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன்.
 

     (இ - ள்.) நமக்கு உவந்து ஈயும் திறையும் - பயாபதி வேந்தன் நமக்கு
மகிழ்ச்சியுடனே இறுக்கும் திறைப் பொருளைத்தானும், மீட்கிய வலித்த அச் செருக்குடைச்
சிறியோன் - மீட்டுக்கொள்ளத் துணிந்த செருக்குமிக்க