பக்கம் : 483
 

    அதுகேட்டு வியப்புற்ற நம்பி நம்நாட்டினும் அத்தகைய கொடிய அரிமாத் திரிவதோ!
அதன் வாயை இருபிளப்பாய்ப் பிளந்து, அதனை யான் கொல்வேன். கொல்லேன் ஆயின்
அச்சுவகண்டன் உரைத்தபடியான் ஒரு பேதைப் பிள்ளைமையுடையேனே ஆகுவன் என்று
சூளுரைத்தான் என்க.
 

( 135 )

இதுவுமது
708.

புழற்கைத் திண்ணுதி மருப்பின பொருகளி றிவைதா
நிழற்க ணோக்கிநின் 1றழன்றன நிலையிடம் புகுக
வழற்க 2ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்
தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான்.
 

      (இ - ள்.) புதல்கை திண் நுதி மருப்பின - தொளை பொருந்திய துதிக்கையையும்
உறுதியான நுனியுடைய கொம்புகளையும் உடைய, பொருகளிறு - போர் யானைகளாகிய,
நிழற்கண் நோக்கி நின்று அழன்றன - தம் நிழலைத் தாமே பார்த்து நின்று சினக்கின்ற,
இவைதாம் - இவைகள், நிலையிடம் புகுக - இவைகட்டும் தறியிடத்தில் அடைவனவாகுக;
கண் அழல் நாறும் - கண்களில் தீக்காலும், அடுபடை தொடுதலை மடியா - கொல்லும்
படைதாங்குதலில் சோம்புதலில்லாத, தொழிற்கணாளரும் - போர்த்தொழிலையே
கண்ணாகப் போற்றும் நம் மறவரும், தவிர்கென - எம்மொடு தொடர்ந்து வருதலைத்
தவிர்வாராக என்று, சூளுற்றான் - வஞ்சினம் சாற்றினான், (எ - று.)
இக்களிறுகள் தம் சேவகம் புகுதுக, மறவரும் எம்மொடு வருதலைத் தவிர்க! யான் தனிச்
சென்று அவ்வரிமாவைக் கொல்வல் என்று சூளுற்றான் என்க.
 

( 136 )

இதுவுமது

709.

இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித்தேர் காலாட்
கவரி நெற்றிய புரவிதங் 3காவிடம் புகுக
வெவரு 4மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே
ருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான்.
 

     (இ - ள்.) இவரும் - ஊர்ந்து செல்லும், மாமணிக் கொடுஞ்சிய - சிறந்த மணிகள்
பதித்த கொடுஞ்சிகளையுடைய, இவுளித்தேர் - குதிரைபூட்டிய தேரும்; காலாள் - காலாட்
படையினராகிய மறவரும், கவரிநெற்றிய புரவி - மயிர்க்குஞ்சம் கட்டிய நெற்றியையுடைய
குதிரைகளும், தம் காவிடம் புகுக - தத்தம் பொழிலிடங்களை அடைக, எவரும் என்னொடு
 


     (பாடம்) 1. றழன்றென்னை. 2. நாறுவ. 3. காய்விடம் புகுதல். 4. எம்மொடு வரப்பெறா தவிர்க.