வரப்பெறார் - பாரும் என்னைத் தொடர்ந்து வருதல்கூடாது, தவிர் கென - ஆதலால் அனைவீரும் அகல்வீராக என்று கூறி, எழில்சேர் உவரி நீர் வண்ணன் - அழகு மிக்க கடல்வண்ணனாகிய திவிட்டன், உழையவர் ஒழியுமாறு உரைத்தான் - தன் துணைவர்கள் அகன்று போமாறு கட்டளையிட்டான், (எ - று.) குதிரை, யானை தேர், மறவர் என்னும் நால்வகைப் படைகளும் தத்தம் நிலையிடங்களிலே செல்க; யாரும் என்னுடன் வருதல் கூடாது; எனத் தன் படைகளைத் தவிர்த்தான் திவிட்டன் என்க. |
(இ - ள்.) நகரமாசனம் இரைப்பது தவிர்த்தபின் - போதன மாநகர்க்கணுள்ள குடிமக்கள் தன்னைத் தடுத்தலான் எழுந்த ஆரவார ஒலியை அடக்கிய பின்னர், நளிநீர் பகருமா கடல் படிவம் கொண்டனை யவன் படர - செறிந்த நீரையுடைய புகழ்மிக்க கரிய கடல் ஓர் இளைஞனுருவம் கொண்டாற் போன்ற வண்ணத்தையுடைய திவிட்டன் செல்ல, சிகரமால் வரை - முடியையுடைய மலையை ஒத்த, திருவமார்பினன் - அழகிய மார்வத்தை யுடையவனும், தெளிந்தனன்பின் - அறிவுத் தெளிவுடையவனும் ஆகிய திவிட்டன் பின்னர், மகரமா கடல் வளை வண்ணன் - மகரமீன்கள் உலாவும் பெரிய கடற்கணுள்ள சங்கை ஒத்த வெண்ணிறவண்ணனாகிய விசயனும், உடன்செல வலித்தான் - அவனோடு செல்லுதலை எண்ணினான், (எ - று.) நகர மக்களின் ஆரவாரத்தை அகற்றிய பின்னர், நம்பி தனியே புறப்பட்டுச் செல்ல, விசயனும் அவனோடு செல்ல எண்ணினன் என்க. |