பக்கம் : 485 | | (இ - ள்.) புழல்கை மால்களிறு - தொளையமைந்த துதிக்கையையுடைய பெரிய யானையினது, எருத்திடை புரோசையிற் பயின்ற - பிடரிற் கட்டப் பட்டுள்ள புரோசைக் கயிற்றில் மிதித்துப் பயின்ற, கழல்கொள் சேவடி வீரக்கழலையணிந்த செந்நிற அடிகள், கருவரை இடைநெறி கலந்த - கரிய மலைகளின் ஊடே செல்லும் வழிகளில் பரவியுள்ள, அழல் கொள்வெம் பொடி அவைமிசை - வெப்பமிக்க வெவ்விய மணலின்மேல், புதைய - பதியும்படி, அவ்வரிமான் - அந்தச் சிங்கம், தொழிற்கொண்டு - கருமத்தை மேற்கொண்டு, ஆருயிர் செகுக்கின்ற சூழல் - அரிய உயிர்க்குலங்களைக் கொன்றழிக்கின்ற இடத்தை, சென்று அடைந்தார்- போய்ச் சேர்ந்தோர், (எ-று.) புரோசை - யானைக் கழுத்திடு கயிறு. யானையெருத்தத்தே புரோசைக் கயிற்றிலே மிதித்துப் பயின்ற தம் சேவடி நெறி கலந்த வெம்பொடியிற் புதையச் சென்று அரிமா ஆருயிர் செகுக்கின்ற சூழலை அடைந்தார் என்க. | ( 139 ) | அம் மாய அரிமாவின் முழக்கம் | 712. | அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா வுடைந்து போகவோ 1ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப விடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே பொடிந்து போயின பொரியென நெரிவொடு புரளா. | (இ - ள்.) அடைந்த வீரரைக் காண்டலும் - அவ்வாறு வந்து சேர்ந்த விசய திவிட்டர்களைப் பார்த்தவுடனே, அழல் உளை அரிமா - தீயை ஒத்த பிடரிமயிர்க் கற்றையையுடைய (அரிகேதுவாகிய) அச்சிங்கம், உடைந்துபோக - அவ்வீரர்கள் மனமுடைந்து ஓடிவிடுதலைக் கருதி, ஓர்இடி இடித்தென - ஒப்பற்ற பெரிய இடி ஒன்று இடித்தாற்போல, உடன்று இடிப்ப - சினந்து முழங்க, இறுவரை இடிந்துபோயின - அம் முழக்கத்தின் அதிர்ச்சியால் பெரிய மலைகள் இடிந்து சிதறின, அங்குடனே - அப்பொழுதே, துறுகல் - குறுங்கற்கள், நெரிவொடு புரளா - நெரிந்து புரண்டு, பொரி எனப் பொடிந்து போயின - நெற்பொரிகளைப் போலத் துகளாய் உதிர்ந்தன. (எ - று). துறுகல் - சிறிய குன்றுமாம். விசயதிவிட்டரைக் கண்டவுடன் அரிகேதுவாகிய அவ்வரிமா, அவர்கள் அஞ்சி ஓடுதலை விரும்பி, இடி இடித்தென முழங்க, மலை துறுகல் முதலியன பொடிந்தனவாய், பொரிகள்போல் துள்ளிப் புரண்டன என்க. | ( 140 ) |
| (பாடம்) 1. இடிப்பிடித்தென. | | |
|
|