(இ - ள்.) காளை - காளையை ஒத்த தோற்றமுடையவனும், ஆளி மொய்ம்பன் - சிங்கத்தை ஒத்த வலியுடையவனும் காள் ஒளி - கரிய நிறமுடைய, முகில்வண்ணன் - மேகம் போன்ற நிறமுடையவனும் ஆகிய திவிட்டனும் கழல்களை விசியா - வீரக்கழல்களை இறுகக் கட்டி, சுடர்விடு கடகங்கள் தோளின் மேற்செலச் செறியா - ஒளிவீசும் கடகம் என்னும் அணிகலன் தோளின் மேல் ஏறச்செறித்து, சூளிமாமணிகொண்டு - சூளா மணிமாலையைக்கொண்டு, சுரிகுஞ்சி பிணியா - சுரிந்த - தலைமயிரை வரிந்துகட்டி, அங்கு - அவ்விடத்தே, ஆர்த்தனன் - ஆரவாரித்தான், அவ்வரி உடைந்தது - அவ்வொலியின் அதிர்ச்சியால் அம்மாயச்சீயம் அஞ்சி ஓடலாயிற்று, (எ - று.) சூளி மாமணிமாலை - தலைமயிரைச் சுற்றிக்கட்டும் மணிமாலை. காளம் - கருப்பு - அது காள், என விகாரப்பட்டது. அவ்வரிமா முழங்குதலைக் கேட்ட திவிட்டன், கழல் விசித்துக் கடகங்களை ஏறச்செறித்து, குஞ்சி பிணித்துத் தானும் ஆரவாரித்தான்; உடனே அவ் வரிமா அஞ்சி உடைந் தோடிற்றென்க. |
(இ - ள்.) செங்கண் காரொளி நெடியவன் - சிவந்த கண்ணையும் கருநிற மேனியையுமுடைய நெடுமாலாகிய திவிட்டன், எங்குப் போவது என்று - எனக்குத் தப்பி நீ எங்குத்தான் செல்வாய்! என்று, உடைநெறி - சிதர்ந்து கிடக்கும் நெறியினூடே, பைங்கண் கோளரி உருவு கொண்டவன் மிசைப் படர்ந்து - பசிய கண்களையுடைய அரிமாவுருக்கொண்ட அரிகேதுவைப் பின்தொடர்ந்து துரத்திச்சென்று, வெங்கண் கூற்றமும் திசைகளும் விசும் பொடும் நடுங்க - வெவ்விய கண்ணையுடைய மறலியும் எட்டுத் திசைகளும் விண்ணும் நடுநடுங்குமாறு, விசையினாற் சிறந்தான் - விசைத்து ஓடுதலிலே சிறந்தவனானான், (எ - று.) |