பக்கம் : 488
 

திவிட்டனும் ஓடும் வழியில் பின் தொடர்ந்து, எழுந்த - பறிபட்டெழுந்தன,
நிரந்தமான்களும் பறவையும் - பரவிய மான் முதலிய விலங்குகளும் பறவைகளும்,
நிலங்கொண்டு பதைத்த - நிலத்தின்மேல் வீழ்ந்து துடித்தன, அரங்கொள் வெம்பரல் -
அரத்தால் அராவப்பட்டன போற் கூறிய வெவ்விய பரற்கற்களையுடைய, அணிவரைக்
கொடு முடியவை தாம் - அழகிய மலைச்சிகரங்கள், உரங்கொள் தோளவன் - வலிமிக்க
தோளையுடைய திவிட்டன், விரல்நுதியுற - விரல்களால் எற்றுண்டு, உடைந்தொழிந்த -
உடைந்து சரிந்தன, (எ - று.)

     அவ்வழி மரங்கள் பறிப்புண்டு. தொடர்ந்து எழுந்தன, மான்களும் பறவையும்
நிலத்தே வீழ்ந்தன. மால்வரைக் கொடுமுடி நம்பியின் கால் விரலிலே எற்றுண்டு உடைந்தன என்க.
 

( 144 )

அம் மாய அரிமா குகையிற் புக்கொளித்தல்
717.

மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை 1நொறுங்காய்க்
கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்
காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா
னோடி 2யிட்டன னொளிவரை முழையகத் தொளித்தான்.
 

     (இ - ள்.) மூடியிட்டன முகிற்கணம் முரன்று - மேகங்கள் ஒலித்து விசும்பைக்
கவிழ்ந்துகொண்டன, கொடு முடித்துறு கற்கள் - சிகரங்களின் குறுங்கற்கள், நொறுங்காய்க்
கூடியிட்டன - துகள்களாகிக் குவிந்தன, வனதெய்வம் குளிர்ந்தாங்கு ஆடியிட்டன -
வனதேவதைகள் உளமகிழ்ந்து ஆடின, அரிஉருவுடையான் - சிங்க உருவத்தையுடைய
அரிகேது, ஓடியிட்டனன் ஒளிவரை முழையகத்து ஒளித்தான் - விரைந்தோடி
மறையுமி டமாகிய மலையினது குகையில் ஒளிந்துகொண்டான், (எ - று.)

     வனதெய்வங்கள் இவனால் தீயோர் அழிவர் நல்லோர் வாழ்வர் என்று கருதி
மகிழ்ந்து ஆடின என்க.

     அரிகேது மெய்ச்சிங்கங்கள் உறையுமொரு முழையிலே ஓடி மறைந்தான் என்க.
 

( 145 )

அக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாராவாரத்தே
துயில் நீத்து எழுதல்
718.

உலத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ
ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் 3விசையின்
நிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்
பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே. 

 


      (பாடம்) 1. நுறுங். 2. யிட்டவன். 3. விசையன்.