பக்கம் : 495
 

    வாங்குநீர் - கடலுமாம். அவ்விடத்தே உள்ள மலைவளங்களினும் அவற்றின் எழிலினும்
மனஞ்செலுத்திய விசயன் அவ்வழக்கினை நம்பிக்கு எடுத்துரைக்கத் தொடங்கினான் என்க.
இனி வருவன குறிஞ்சிவளம் உரைத்தலாம்.
 

( 156 )

 
729.

புள்ளுங் 1கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி ணுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழ
வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் 2றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்.
 

      (இ - ள்.) புள்ளும் கொல்லென வொலிசெயும் - பறவைகளும் “கொல்“ என்று
ஆரவாரிக்கும், பொழில்புடையுடைய - சோலைகளைப் பக்கத்தே உடையனவாய், கள்ளின்
நுண் துளி கலந்து கால் அசைத்தொறும் - காற்று தேனினது நுணுகிய துளிகளை
அளாவிக்கொண்டு இயங்குந்தோறும், கமழ - மணம் கமழாநிற்பவும், உள்ளும் -
உள்ளிடங்களிலும், தாதுகொண்டு - மகரந்தத்துகளை அப்பிக்கொண்டு, ஊதுவண்டு அறாதன
- தேன் தேரும் வண்டுகளை ஒழியாதனவாயும், ஒளிசேர் - ஒளியையுடையனவாய்,
வெள்ளென் தோன்றுவ - வெண்மையாகக் காணப்படுவன, விறலோய் - ஆற்றல்
மிக்கோனே, கயம் அல்ல - குளங்கள் போலத் தோன்றுவனவேனும் அவைகள் உண்மையில்
குளங்கள் அல்ல, பளிக்கறை - பளிக்குப் பாறைகள் ஆகும், (எ - று.)

     பறவைகள் ஆரவாரிக்கவும் சோலைகளைப் பக்கத்தே யுடையனவும் ஊது
வண்டறாதனவும் காற்றுத்தேனைத் துளித்தல் அறாதனவுமாயின என்க. வெள்ளெனத்
தோன்றுவன தண்கயம் அல்ல; பளிக்குப் பாறையாங் கண்டாய் என்றான் என்க.
 

( 157 )

 

730.

காளை வண்ணத்த களிவண்டு கதுவிய துகளாற்
றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று
ளாளி மொய்ம்பவங் ககலில யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்.
 

     (இ - ள்.) ஆளி மொய்ம்ப - அரிமாவை ஒத்த ஆற்றலுடையோனே! காள்ஐ
வண்ணத்த களிவண்டு - கரிய அழகிய நிறமுடைய களிப்பு மிக்க அளிகள், கதுவிய
துகளால் - போர்க்கப்பட்ட மகரந்தத்தோடு, தாளைமூசிய - நாளங்களில்
மொய்த்தலையுடைய, தாமரைத் தடம்பல - தாமரைகள் செழிப்புற்றுள்ள இடங்கள் பல,
அவற்றுள் - அவ்விடங்களுள், அகலிலை அலரொடுங் கிழிய - அகன்ற தாமரையின்
இலைகளும் மலர்களும் கிழிந்து போம்படி, வாளை பாய்வன - வாளைமீன்களும் விசைத்துப்
பாய்கின்றன,
 


     (பாடம்) 1. கொள்ளென. 2. றோன்றுவ.