பக்கம் : 496
 

கயமல்ல - அங்ஙனமிருந்தும் அவைகள் நீர்நிலைகளல்ல, மறவோய் - வீரனே! வனத்திடர்,
இடையறாது அருவி பாய்ந்தோடும் காட்டினுள்ள திடர்களேயாகும், (எ - று.)

     காளம் ஐவண்ண எனக் கண்ணழித்துக் கொள்க. காளம் - கருநிறம். ஐ - அழகு.
காளம் காள் என்று ஈற்றுயிரும் மெய்யும் கெட்டு நின்றது, மலைச்சாரலில் உள்ள சாய்ந்த
திடர்களில் இடையறாது நீரோட்டம் நிகழ்தலின், அங்குத் தாமரைகள் செழிப்புற்றுள்ளன.
வாளைகள் துள்ளுகின்றன என்பதாம்.
 

( 158 )

 
731.

மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு
துன்னு மாந்த ர்கள் பனிப்புறத் துணைமையோ 1டதிர்வ
இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்.
 

      (இ - ள்.) மன்னும் வார் துளித்திவலைய - நிலைபெற்ற நீண்ட நீர்த் துளியாகிய
திவலையை உடையன, மலைமருங்கு இருண்டு - மலையின் பக்கத்தே குவிந்து இருள்செய்து,
துன்னு மாந்தர்கள் பனிப்புற - பக்கத்தே வரும் மக்கள் அச்சத்தால் நடுங்க,
துணைமையோடு அதிர்வ - கூட்டத்தோடே முழங்குவ; இன்னவாம் பல வுருவுகள் -
இப்படிப்பட்ட தன்மையுடைய பலவாகிய உருவங்கள், இவற்றினுள் இடையே மின்னும்
வார்ந்தன - இவ்வுருவங்களின் ஊடே மின்னல்களும் தோன்றி நீளாநின்றன, முகில்அல்ல -
இவ்வுருவங்கள் - மேகங்களேயோ எனில் அல்ல, விறலோய் - வீரனே, களிறுகள் -
இவைகள் உண்மையில் யானைக்கூட்டங்களே யாகும், (எ - று.)

     மலைகளிலே கூடி இருண்டு மின்னுடன் தோன்றுவன முகிற் கூட்டங்கள் போன்று
தோன்றுகின்றன. அவை முகிலல்ல களிற்றுக் குழாமே காண் என்றான் என்க. துளி -
மதத்துளி. மின்னுவார்தல் - யானைகளின் மருப்பொளி தோன்றுதல்.
 

( 159 )

 

732.

உவரி மாக்கட னுரையென 2வொளிர்தரு மயிர
அவரை வார்புனத் 3தருந்திமே யருவிநீர் பருகி
இவரு மால்வரை யிளமழை 4தவழ்ந்தென 5விவையே
கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்.
 

     (இ - ள்.) கடல்வண்ண காணாய் - கடல்போன்ற நீலமேனியனே பார்ப்பாயாக,
மால்வரை இளமழை தவழ்ந்தென இவரும் இவை - பெரிய மலையிடத்தே வெண்மேகங்கள்
தவழ்ந்து செல்வதுபோல் ஊர்ந்து செல்லும்
 


     (பாடம்) 1. டதிர. 2. வொளிர் தரும் பிரயீர். 3. தருத்தி மேய்ந்த ருவிநீர். 4. தவழ்ந்தன. 5. விவையோ.