பக்கம் : 501 | | நிலம்போலத் தோன்றி - விலக்குதற்கியலாத வன்னிலம் போன்று காட்சிமாத்தி ரையே புலனாகி, புகில் - அதன்மேல் அறியாது செல்லுமிடத்தே, காக்கலாகாகளிறு ஆழஆழும் - தன்னைக் காத்துக்கொள்ள வியலாதபடி யானைகளும் முழுகிப் போமாறு ஆழ்ந்துவிடும் இயல்புடைய, புறம்தூக்கந் தூங்கும்தொளி - மேற்புறம் இறுகி உட்பகுதி தொளுதொளுவென்றிருக்கும் சேற்றுநிலத்தே, தொடர்ந்து பொன்றுங்கள் - உயிர்கள் அறியாமையால் சென்றழுந்தி மாயும், (எ - று.) தூக்கந்தூங்குதல் - தொளதொளெனல், பொன்றுங்கள் என்ற குறிப்பால் உயிர்கள் என்பது வருவித்துரைக்கப்பட்டது. மேற்புறம் இறுகி, உட்புறம் சேறாக இருக்கும் நிலத்தே உயிர்கள் அறியாதே சென்று மாயும் என்றான் என்க. | ( 168 ) | | 741. | இதுவித்தாழ் 1வார்நிலத் தியற்கைமே 2லாற்பல மதியம்பா ரித்தன மணிக்கற் 3பா றையின்மிசை நிதியம்பா ரித்தொளி நிழன்று 4துஞ் சன்னிலைக் கதியின்வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே. | (இ - ள்.) இது - இதுகாறும் கூறியது, இத்தாழ்வார் நிலத்தியற்கை - இம்மலைச்சரிவு நிலங்களின் தன்மைகளாம், மேலால் பல மதியம் பாரித்தென - இனி இம்மலைச்சிகரங்களிலோ எனில், பல திங்கள் மண்டிலங்கள் ஒரு சேர ஒரு காலத்திலே வெளிப்பட்டாற் போன்ற, மணிக்கற் பாறையின் மிசை - மாணிக்கக் கற்சிகரங்களின் மேல், நிதியம்பாரித்து ஒளி நிழன்று துஞ்சல் - பல்வேறு செல்வங்ளும் மிகுத்துக் கிடந்து ஒளிவீசி மிளிர்ந்து கிடத்தல் ஆகிய காட்கிகள், நிலைக்கதியின் வாழ்வாரையும் - அவாவறுத்து நிலைத்த கேவலஞானத்தின் நின்று வாழும் துறவியரையும், கண்கள் வாங்குங்கள் - கண்கவரும், (எ - று.) பொறியடக்கமுடைய துறவிகள் கண்களையும் இம் மலைநிலத்தே கிடந்திமைக்கும் மதியம்பாரித்தன்ன நிதியம் கவரும் என்றான் என்க. | ( 169 ) | வேறு | 742. | இருது வேற்றுமை யின்மையாற் 5சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய். | |
| (பாடம்) 1. வாந்நிலத். 2. லாம்பல. 3. பாறைம் மிசை. 4. துஞ்சுந் நிலைக். 5. குருதி. | | |
|
|