பக்கம் : 503
 
வேறு
744.

திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்.
 

     (இ - ள்.) திரைத்த சாலிகை நிரைத்தபோல் - சுருக்கிய கவசங்களை இட்டாற்
போன்று (பொழிலிடத்தே), தேன்கள் - அளிகள், நிரந்து - பரவி மொய்த்து, இரைப்ப -
இசைபாடுவனவாம். விரைக்கொள் மாலையாய் - மணமாலையணிந்த இளைஞனே, (எ - று.)

     கரிய கவசமிட்டாற் போன்று கருநிற வண்டுகள் நெருங்கி மொய்த்து ஆரவரித்தலைக்
காண் என்றான் என்க.
 

( 172 )

வேறு
745.

வரைவாய் நிவந்த வடுமா வடுமா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
1இரவா யிருள்செ யிடமே யிடமே.
 

      (இ - ள்.) வரைவாய் - மலையின்கண், நிவந்த - நின்றுயர்ந்த, வடுமா -
பிஞ்சுகளையுடைய மாமரங்கள், நிவந்துவிரியா - ஓங்கித் தழைத்து விரிந்து, புலரா -
விடிதலில்லாத, இரவாய் - இராக்காலம்போலவே, இருள்செய் - இருளைச் செய்கின்ற,
இடமே - இடங்கள், விரியாபுரைவாய் - அகற்சி யில்லாத சிறிய ஊற்றுத் தொளைகளிடத்தே,
அசும்பு புலரா - நீர் உறுதல் ஒழியாததும், அடுமா - கொலைத் தொழிலைச் செய்யும் காட்டு
விலங்குகள், விரைவாய் - விரைவுடையனவாய், மேயிடம் - மேயும் இடமாகும் (எ - று.)

     மாமரங்கள் தழைத்து இராக்காலம் போன்று பகலினும் இருள் செய்யும் இடமெல்லாம்,
இருளில் வழங்கும் காட்டுவிலங்குகள் இரவென்றே கருதி வழங்கா நிற்கும் என்பதாம்.
 

( 173 )

வேறு
746.

இளையா ரிளையா ருடனாய் முலையின்
வளையார் வளையார் மனம்வேண் டுருவம்
விளையா விளையாட் டயருந் தொழிறான்
றளையார் தளையார் பொழிலின் றடமே.

  


     (பாடம்) 1. இரவா யிருள்பா யிடமே யிடமே.