பக்கம் : 504 | | (இ - ள்.) இளையார் - இளைய ஆடவர்கள், இளையாருடனாய் - தம் தோழராகிய இளையாருடனே, முலையின் - கொங்கைகளையுடைய, வளையார் - வளைவுடைய வளையார் - வளையலணிந்த மகளிர்களுடைய, மனம் வேண்டு உருவம் - நெஞ்சம் விரும்புதற்குக் காரணமான கோலம் கோடலை, விளையா - மேற்கொண்டு செய்து, விளையாட்டு - பொருந்திய விளையாட்டினை, அயரும் தொழில்தான் - இயற்றுகின்ற தொழிலை, தளையார் - ஒழியார்கள், தளையார் பொழிலின் தடமே - மனத்தைத் தன்பாற் பிணிக்கும் எழிலுடைய இப்பொழிலிடங்களில் எல்லாம், (எ - று.) இளமையுடைய ஆடவர் தம் தோழருடனே மகளிர் விரும்புதற்கேற்ற கோலந்தாங்கி விளையாடுதலை இப் பொழிலிடங்களிலே யாண்டும் தவிர் தலிலர் என்க. தளையார் - கட்டுதலிலர் - ஒழியார் என்றபடி. | ( 174 ) | வேறு | 747. | அளியா 1டு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா விளையாடும் 2விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும் வளையார்கண் 3மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ இளையாரை 4யினையவே யினையவே யிடமெல்லாம். | (இ - ள்.) அளியாடும் - வண்டுகள் ஆடாநின்ற அமரங்கள் - அந்த மரங்கள், மகிழ்ந்து - இளையார்கள், களிப்புற்று, ஆனா - ஒழிவின்றி, விளையாடும் விதம் - விளையாடுதற்குத் தகுந்ததொரு வகையானே, மலர்ந்த - மலரா நின்றன, வளையார் - வளையலணிந்த மலையர மகளிர்கள், இளையாரை - ஆண்டு விளையாடும் இளைஞர்களைக் கண்டு, மகிழ்ப - மனமகிழ்ச்சி யடைவார்கள், அ மரங்கள் - அப்பூம்பொழிலின் கண்ணுள்ள மரங்களும், மகிழ்ப - மகிழ்ச்சியுடையனவாய், மணிதூவும்விதம் - மணிகளைத் தூவுமாப்போலே, மலர்ந்த மலர் சோர்வ - தாம் மலர்ந்துள்ள மலர்களை அவ்விளைஞர்கள் மேலே பொழிவனவாம், இனைய இனைய - இப்பொழிலிடமெல்லாம் இத்தகைய விளையாட்டிடங்களேயாம், (எ - று.) | ( 175 ) | வேறு | 748. | தாமரைத் 5தடத்திடை மலர்ந்த சாரல்வாய்த் தாமரைத் துளையொடு மறலித் தரவில்சீர்த் தாமரை 6த் தகுகுணச் செல்வன் சண்பகம் தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே. | |
| (பாடம்) 1. யாடுமரங்கள் மரங்கள். 2. விதமலர்ந்த மலர்தர மணிவதூஉம். 3. மகிழ்ப மகிழ்ப (சில ஏட்டில் மரங்கள் மலர்ந்த மகிழ்ப என்னும் அடுக்கு இல்லை.). 4. இளையவே யிளையவே யிடமெல்லாம். 5. தடத்தின. 6. வெண்ணறும் மிகுகுணச், முலகினிநகுமே. | | |
|
|