பக்கம் : 507 | | | | வாய்ந்த பூம்படை யும்மலர்க் கண்ணியு மீந்த சாகைய விம்மலை யாரமே. | (இ - ள்.) சாந்தும் தண்டழையும் - சந்தனத்தையும் குளிர்ந்த தழையையும், இம்மலை ஆரம் - இம்மலைக்கண் உள்ள சந்தன மரங்கள், சுரமங்கையர்க்கு - தேவமகளிர்களுக்கு, ஏந்தி நின்றன - உபசரித்தற் பொருட்டுத் தாங்கிநின்றன, இம்மலையாரம் - இனி இம்மலைக்கண் உள்ள கடம்பமரங்களும், வாய்ந்த பூம்படையும் - பொருந்திய மலர்ப்படுக்கை களையும், மலர்க்கண்ணியும் - மலராகிய தலைமாலையையும், ஈந்த சாகையை - அச்சுர மகளிர்களுக்கு வழங்கின கிளைகளையுடையன, (எ - று.) கடப்பமலர் மாலைபோறலின் கண்ணி என்றார், கடப்பமலர் உதிர்ந்து கிடப்புழிப் படுக்கை விரித்தாற்போற் றோற்றலின், பூம்படை என்றார். ‘படையமை சேக்கை‘ (கலி) | ( 180 ) | | 753. | இயங்கு கின்னர ரின்புறு நீரவே 1தயங்கு கின்றன தானமந் தாரமே பயங்கொள் வார்பயங் கொள்ப வனைத்தையும் தயங்கு கின்றன தானமந் தாரமே. | (இ - ள்.) தயங்குகின்றன தான மந்தாரம் - திகழாநின்ற வானவருலகத்து மந்தார மரமாகிய தேவதருவோ எனில், இயங்குகின்னரர் இன்புறுநீரவே - அத் தருநிழலிலே இயங்கும் இயல்புடைய கின்னரதேவர்கள் மட்டும் இன்புறுதற் குரியனவாம், தானம் - இவ்விடத்துள்ள, மந்தாரம் - இம் மந்தார மரங்கள், பயங்கொள்வார் பயங்கொள்வ அனைத்தையும் - தம் பால் பயன் கொள்ளுதற்குரியார் எல்லாருக்கும் அவர் பயன் நுகர்தற்குரியவற்றை யெல்லாம், தயங்குகின்றன, தம்பால் உடையனவாய்த் திகழாநின்றன, (எ - று.) தானம் - வானுலகம்; இடம். வானவருலகத்தே உள்ள மந்தார மரங்கள் ஆண்டுள்ள கின்னரர்க்குமட்டுமே இன்பந்தருவன, இங்குள்ள மந்தாரம் வரையாது வள்ளல்போன்று எல்லோர்க்கும் இன்ப மளிப்பனவாம் என்க. | ( 181 ) | வேறு | 754. | பொன்விரிந் 2தனையபூங் கோங்கும் வேங்கையு முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன் வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே. | |
| (பாடம்) 1. தயங்கி நின்றன. 2. தனையன. | | |
|
|