பக்கம் : 507
 
 
 

வாய்ந்த பூம்படை யும்மலர்க் கண்ணியு
மீந்த சாகைய விம்மலை யாரமே.
 

     (இ - ள்.) சாந்தும் தண்டழையும் - சந்தனத்தையும் குளிர்ந்த தழையையும், இம்மலை
ஆரம் - இம்மலைக்கண் உள்ள சந்தன மரங்கள், சுரமங்கையர்க்கு - தேவமகளிர்களுக்கு,
ஏந்தி நின்றன - உபசரித்தற் பொருட்டுத் தாங்கிநின்றன, இம்மலையாரம் - இனி
இம்மலைக்கண் உள்ள கடம்பமரங்களும், வாய்ந்த பூம்படையும் - பொருந்திய
மலர்ப்படுக்கை களையும், மலர்க்கண்ணியும் - மலராகிய தலைமாலையையும், ஈந்த சாகையை
- அச்சுர மகளிர்களுக்கு வழங்கின கிளைகளையுடையன, (எ - று.)

     கடப்பமலர் மாலைபோறலின் கண்ணி என்றார், கடப்பமலர் உதிர்ந்து கிடப்புழிப்
படுக்கை விரித்தாற்போற் றோற்றலின், பூம்படை என்றார். ‘படையமை சேக்கை‘ (கலி)
 

( 180 )

 
753.

இயங்கு கின்னர ரின்புறு நீரவே
1தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்ப வனைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே.
 

      (இ - ள்.) தயங்குகின்றன தான மந்தாரம் - திகழாநின்ற வானவருலகத்து மந்தார
மரமாகிய தேவதருவோ எனில், இயங்குகின்னரர் இன்புறுநீரவே - அத் தருநிழலிலே
இயங்கும் இயல்புடைய கின்னரதேவர்கள் மட்டும் இன்புறுதற் குரியனவாம், தானம் -
இவ்விடத்துள்ள, மந்தாரம் - இம் மந்தார மரங்கள், பயங்கொள்வார் பயங்கொள்வ
அனைத்தையும் - தம் பால் பயன் கொள்ளுதற்குரியார் எல்லாருக்கும் அவர் பயன்
நுகர்தற்குரியவற்றை யெல்லாம், தயங்குகின்றன, தம்பால் உடையனவாய்த் திகழாநின்றன,
(எ - று.)

     தானம் - வானுலகம்; இடம். வானவருலகத்தே உள்ள மந்தார மரங்கள் ஆண்டுள்ள
கின்னரர்க்குமட்டுமே இன்பந்தருவன, இங்குள்ள மந்தாரம் வரையாது வள்ளல்போன்று
எல்லோர்க்கும் இன்ப மளிப்பனவாம் என்க.
 

( 181 )

வேறு

754.

பொன்விரிந் 2தனையபூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே.

  


     (பாடம்) 1. தயங்கி நின்றன. 2. தனையன.