பக்கம் : 509 | | சிதறுமாறு கலவிப் போராற்றிய பரிய அணையாகிய, பாவு செந்துகில் உடைப்பள்ளிபோலும் - விரித்த செந்நிறமான துகிலையுடைய பள்ளியை ஒக்கும், (எ - று.) திங்கள் ஒளிபரவிய கற்பாறைகள் மேல் பூந்துகள் படிந்துள்ள தோற்றம், இளையவர் திளைக்கும் பள்ளியைப் போலும் என்க. | ( 184 ) | வேறு | 757. | அழலணி யசோகஞ் 1செந்தா தணிந்துதே னரற்ற நின்று நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம் குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு 2பூசி எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே. | (இ - ள்.) அழல் அணி அசோகம் - நெருப்புப் பிழம்பு நிமிர்ந்தாற் போன்ற அழகிய அசோகமரம், செந்தாதணிந்து - தனது செவ்விய பூந்தாதாற் போர்க்கப்பட்டு, தேன் அரற்ற நின்று - அளிகள் தன்னைச் சூழ்ந்துபாட நின்று, நிழலணி மணிக்கல் நீல நிறத்தொடு - குளிர்ந்த அழகிய மரகதமணி யாகிய கல்லில் எழும் நீல வண்ணம் கதுவப்பட்டு, நிமிர்ந்த - உயர்ந்து நின்ற, தோற்றம்-காட்சி, குழல் அணிகுஞ்சி மைந்தர்-கடைகுழன்று அழகி தாகிய தலைமயிரையுடைய ஆடவர்கள், குங்குமக் குழம்பு பூசி - குங்குமக் குழம்பைத் திமிர்ந்துகொண்டு, எழிலணி திகழ - எழுச்சிமிக்க அழகு விளங்குமாறு, நின்றால் எனையநீர் - நின்றால் எத்தன்மையாகத் தோன்றுமோ, அனைய தொன்றே - அத்தகைய தன்மையுடைய தொன்றாம், (எ - று.) நீலமணியின் ஒளி தன்பாற் பரவத் தீப்பிழம்பு போன்று மலர்ந்து திகழும் அசோகு, ஆடவர்கள் குங்குமம் பூசி அணிதிகழ நின்றாற்போலும் என்க. | ( 185 ) | | 758. | இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை 3தணந்தொளி விடாத வெண்டா மரைததைந் தனையதொன்றே. | (இ - ள்.) தேன் இணைந்து முழங்க - அளிகள் தம் துணைகளுடனே சேர்ந்துபாட, விண்ட ஏழிலம்பாலை - மலர்ந்த ஏழிலைம்பாலை மரத்தினது, வெண்பூ மணந்து - வெளிய பூ மணங்கமழப் பெற்று, தாது அணிந்து - பூந்துகள் போர்க்கப்பட்டு, தோன்றும் - காணப்படுகிற, மரகத மணிக்கற் பாறை - மரகதம் என்னும் கல்லாலியன்ற பாறை, கணங்கெழு களி |
| (பாடம்). 1. செஞ்சாந். 2. மூசி. 3. தணந் தொழில். | | |
|
|