பக்கம் : 510
 

     வண்டால - கூட்டமாகக் குழீஇய களிப்புடைய வண்டுகள் பாட, பாசடை கலந்த
பொய்கை - பசிய இலைகள் அடர்ந்த குளம், ஒளி தணந்து விடாத - ஒளியகலாத,
வெண்டாமரை ததைந்தது அனையது ஒன்றே - வெள்ளிய தாமரைமலர்கள் செறியப்பெற்ற
காட்சியை ஒப்பதொன்றாம், (எ - று.)

ஏழிலைம்பாலை மலர்ந்து தாதணிந்து நிற்றலையுடைய மணிக்கற்பாறை வெண்டாமரைத்
தடம்போல் விளங்கும் என்க.
 

( 186 )

 
759.

காரிருட் குவளைக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்
கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்
பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்
சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்.
 

      (இ - ள்.) கார் இருள் குவளை கண்ணி - கரியதாய் இருண்ட குவளை மலர்
மாலையையும், கதிர்நகை - ஒளியுடைய பற்களையும், கனம்பொன் தோட்டு - உயரிய
பொன்னாலாய காதணிகளையும், கூர்இருள் சுரிபட்டன்ன குழலணி கொடிறு உண் கூந்தல் -
செறிந்த இருள் சுருண்டாற்போன்று குழன்று அழகியதாய்க் கதுப்புகளைக்கௌவிய
அளகத்தையும், பேரிருள் கிழியத் தோன்றும் பிறை எயிற்று - பெரிய இருள் பிளக்கும்படி
ஒளிவீசும் பிறை போன்ற கோரப்பற்களையும், அமரநோக்கில், அமர்த்த பார்வை களையும்
உடைய, சூரர மகளிர்கள் வாழும் இடம் - சூரர மகளிர்கள் வதியும் இடமாகும், சுடர்ப
இவை எல்லாம் - ஒளிவீசித் தோன்றும் இவ்விட மெல்லாம், (எ - று.)

     இவ் விடமெல்லாம் கண்ணியையும் தோட்டையும் குழலையும் எயிற்றையும்
நோக்கையும் உடைய சூரர மகளிர்கள் வாழும் இடம் என்க.
 

( 187 )

வேறு

760.

வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்.
 

     (இ - ள்.) நிறைபுனல் தடத்து வாழ்வார் - ஈண்டுள்ள நிறைந்த நீர்நிலைகளில்
வாழ்பவர்கள், இருபுடையும் வார் வீக்கி - இரண்டு பக்கங்களினும் கச்சிறுக்கிக் கட்டப்பட்டு,
வடம் சுமந்து - மணிவடங்களைத் தாங்கி, எழுந்து - பணைத்தெழுந்து, வேங்கை ஏர்
இருஞ்சுணங்கு சிந்தி - வேங்கைமலரின் நிறம் போன்ற பொன்னிறமான பெரிய தேமல்
பாய்ந்து,