பக்கம் : 513
 

ஆய்நிழல் துளும்பு அவ்வானோர் - ஆராய்தற்குரிய ஒளிமிக்க அவ்வமரர்கள், அசதியாடு
இடங்கள் - பரிகசித்து விளையாடுதற்குரிய இடங்கள் ஆகும், சேய் நிழல் திகழும்
செம்பொன் - சிவந்த ஒளியினால் விளங்கும் செவ்விய பொன்னாலாகிய, திலதவேதிகைய
ஆய - புள்ளியிடப் பட்ட தெற்றிகளை உடையவாகிய, நிழல்பாய் பவளச்செங்கால் -
ஒளிகாலும் பவளத்தூண்களையுடைய, பளிக்கு மண்டபங்கள் எல்லாம் - பளிங்காலியன்ற
அந்த மண்டபங்கள் அனைத்தும், ( )

     ஆய்நிழல் நுண்ணிதாய ஒளிக்கதிர் எனினும் ஆம். திலதவேதிகை - உயரிய வேதிகை
எனினும் பொருந்தும். ஆண்டுத் தோன்றும் பவழச் செங்கால் பளிக்குமண்டபங்கள் எல்லாம்,
அமிர்தனாரோடு வானோர் அசதியாடிடங்கள் என்க.
 

( 192 )

 
765.

எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக 1ஞாயிற்
செழுமணிச் சிகரகோடிச் சித்திர கூட மெல்லாம்.
 

      (இ - ள்.) முழுமணி - தோட்கப்படாத மாணிக்கங்களாலியன்ற, புரிசைவேலி -
மதிலாகிய வேலியையும், முத்தம் மண்டபத்தவாய - முத்துக்களாலியன்ற
மண்டபங்களையுமுடையனவாகிய, கழுமணிக்கபாட வாயில் - அராவிய மணிகள்
பதிக்கப்பட்ட கதவுகளையுடைய வாயிலும், கதிர்நகைக் கனகஞாயில் -
ஒளிக்கற்றைகளாற்றிகழும் பொன்னாலியன்ற எண்ணிறந்த சிகரங்களையும் உடையவாய்த்
திகழும், சித்திரகூடங்கள் எல்லாம் - எழுதெழிலம் பலமனைத்தும், எழின்மணிச்
சுடர்கொள்மேனி - அழகிய மணியின் ஒளியை ஒத்த மேனியையுடைய, இமையவர் -
இடங்கள் கண்டாய் - தேவர்கள் வாழும் இடங்கள் என அறிதி. ( )

     மணிப்புரிசையினையும், முத்தமண்டபங்களையும், மணிக்கபாடங் களையும், கன
கஞாயில்களையும், சிகரகோடியையும் உடைய இச்சித்திர கூடமெல்லாம் இமையவர் இடங்கள்
என்க.
 

( 193 )

 

766.

தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்
வம்பவாங் குழலி னேங்க மணியறை யரங்க மாக
உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக
நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்.
 

     (இ - ள்.) தும்பிவாய் துளைக்கப்பட்ட கீசகம் - வண்டுதன் வாயால்
தொளைக்கப்பட்ட மூங்கில், வாயுத்தன்னால் - காற்று வீசுதலாலே, வம்பு  
 


     (பாடம்) 1 நாறிற் - நாயிற்.