பக்கம் : 514
 

அவாம் - புதிய இசையழகை அவாவு தலையுடைய, குழலின் ஏங்க - குழல் என்னும் இசைக்
கருவி போன்று ஒலிக்கவும், மணியறை - மணிகள் பரவிய நிலம், அரங்கம்ஆக -
கூத்தாட்டரங்கு ஆகவும், உம்பர்வான் மேகசால ஒலி - உயரிய விசும்பின்கண் உள்ள
முகில்களின் முழக்கம், முழாக்கருவியாக - மத்தள ஒலியாக அமையவும், தேன்பாட -
அளிகள் இசைபாட, மஞ்ஞை நாடகம் நவில்வ - மயில்கள் விறலியர்போல் கூத்தாடுதலை,
நம்ப காணாய் - பெருமைமிக்க திவிட்டனே நீ காண்க! (எ - று.)

வண்டுகளாற் றுளைக்கப்பட்ட மூங்கில்களிலே காற்று நுழைதலாலே, அது குழல்போலிசை
யெழுப்ப, மணியறையை அரங்காகக் கொண்டு முகில் ஒலி முழவாக வண்டுபாட மயிலாடும்
நாடகம் என்க.
 

( 194 )

 
767.

பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ண னுவப்பக் காட்டி
மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் 1மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு 2ணீங்க லுற்றார்.
 

      (இ - ள்.) பொன் அவிர் மகரம் பைம்பூண் - அழகு திகழ்கின்ற மகரமீன் வடிவிற்
செய்த பசியஅணிகலன்களையும், பொலம்குழை - பொற்குண்டலங்களையும், இலங்குசோதி -
விளங்கும் ஒளியையும், கல்நவில் வயிரம் திண்டோள் - கல்லை ஒத்த உறுதியுடைய
திண்ணிய தோளிணை களையும் உடைய, கடல்வண்ணன் உவப்பக்காட்டி - திவிட்டன்
மகிழும்படி அம்மலைவளங்களை எடுத்துக்காட்டி, மன்நவின்று இறைஞ்சும் செய்கை
வளைவண்ணன் - மன்னர்கள் புகழ்ந்து வணங்குதற்குரிய உயரிய ஒழுக்கமுடையவனான
விசயன், மலையின்மேலால் - அம்மலை நிலத்தின் மிசை, இன்னன - இவைபோல்வன,
பகர்ந்து - சொல்லியவாறே, சொல்லும் எல்லையுள் நீங்கலுற்றார் - கூறப்படும்
அம்மலைநிலத்தின் எல்லையைக் கடந்து சென்றனர், ( )

     பைம்பூணையும், இலங்கும் சோதியையும், திண்டோளையும் உடைய கடல்வண்ணன்
மகிழுமாறு குறிஞ்சிவளங்காட்டி, வளைவணன் செல்லும்போது அவ்வெல்லை நீங்கலுற்றா
என்க.
 

( 195 )

 

768.

பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ 3நிரந்த பாங்கர்
மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்
காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் 4காட்டி
யோசனை யெல்லை 5சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்.

 


     (பாடம்) 1. தலை. 2. ணிலங்கலுற்றார் - ன். 3. நிரந்து காட்ட. 4. காட்ட. 5. சான்று.