(இ - ள்.) வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் - அச்சத்தால் உளம் வெம்பும்படி வருந்தா நின்ற உயிரினங்களை எல்லாம், விழுங்கிய - விழுங்கு வதற்கு, வெகுண்டு நோக்கி - சினந்துபார்த்து, உலகந்தன்னை - இவ்வுல கத்தை, கம்பமாக் கண்டிடும் - அஞ்சி நடுங்குமாறு செய்யும், சீயம் - அச் சிங்கத்தை, நம்ப! - பெருமைமிக்க திவிட்டனே!, நீ அழித்தது அல்லால் - நீ அழித்ததையன்றி, நகைஎயிற்றதனை - ஒளிமிக்க பற்களையுடைய அதனை, நண்ணல் அணுகத்தானும், வம்பறா மகரப் பைம்பூண்வானவர் தமக்கும் ஆமோ - மணம் மாறாத, மகரப் பைம்பூணை அணிந்த அமரர்களுக்கும் இயல்வதேயோ! (எ - று.) உயிரை யெல்லாம் விழுங்கி, வெகுண்டு, உலகினை நடுங்கக் கண்டிடும், இவ்வரிமாவை நம்பி! உன்னையல்லால், அமரரும் அழிக்கும் ஆற்றலுடையாரல்லர், என்றான், என்க. |
(இ - ள்.) வாங்கு நீர் வண்ண கேளாய்! - வளைந்த கடல்போன்ற நீல வண்ணனே! கேட்பாயாக, ஆங்கு நீ முனிந்த போழ்தின் - அவ்விடத்தே நீ சினந்து ஆரவாரம் செய்தபொழுது, அரியது அகல நோக்கி - அச்சிங்கம் அஞ்சி ஓடியதைக் கண்டபொழுது, மாயமா மதித்து நின்றேன் - மாயம் என எண்ணி நின்றேன், ஒலிபுனல் உதிர யாறு - முழக்கத்தையுடைய நீர்போன்ற குருதியாறு, வீங்கி வந்து இழிந்தபோழ்து - பெருகி வந்து பாய்தலைக் கண்டபின்னர்த்தாள், மெய்யென வியப்புச் சென்றேன் - உண்மையே என்றுணர்ந்து வியப்புற்றேன், (எ - று.) நம்பீ! நீ ஆரவாரித்தபோது ஓடிய அரிமாவைக் கண்டு இஃதொரு மாயம் போலும் என்று எண்ணியிருந்தேன். ஓசையுடனே குருதியாறு பாயக் கண்ட பின்னரே உண்மை என்றுணர்ந்து வியந்தேன் என்றான் என்க. |