பக்கம் : 517
 
 
 

வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
1யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே.
 

      (இ - ள்.) குன்றிற்கு மருங்குவாழும் - மலைச்சாரலிலே வாழுகின்ற, குழுஉக் களிற்று
இனங்கள் எல்லாம் - கூட்டமாக வாழுமியல்புடைய யானைகளையெல்லாம் - அன்றைக்கு
அன்று - நாடோறும், அலறக்கொன்று உண்டு - அலறும்படி கொன்று தின்று, அகலிடம்
பிளப்பச் சீறி - அகன்ற உலகம் பிளந்து போம்படி சீறுதலைச் செய்து, வென்றிக்கண்
விருப்புநீங்கா - வெல்லுதற் றொழிலில் ஆசை ஒழியாத, வெங்கண்மா இதனை - வெவ்விய
கண்ணையுடைய இவ் வரிமாவை, கொன்றாய் - நீ கொன்றொழித்தாய், உலகம் எல்லாம் -
இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தும், இன்றைக் கொண்டு இனிது கண்படுக்கும்
அன்றே - இன்று தொடங்கி அச்சம் தவிர்ந்து இனிதாக உறங்குவனவாம், (எ - று.)

     குன்றிடத்தே வாழும் யானைக் கூட்டங்களை நாடோறும் அலறக்கொன்று தின்று
கொடுமையே செய்த இவ் வரிமாவை நீ கொன்றாய், இன்று தொடங்கி உலகம் அச்சமற்
றின்புற்றுறங்கும் என்றான், என்க.
 

( 200 )

அரசரின் முதற் கடமை

773.

உரைசெய்நீ 2ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை 3மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கைமேற் படைக்கப் பட்ட
அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி 4ததனி லுண்டோ.
 

     (இ - ள்.) உரைசெய் நீள் உலகின் வாழும் - புகழ்ந்தோதப்படுகின்ற, நெடிய உலகில்
வாழாநின்ற, உயிர்களுக்கு உறுகண் கண்டால் - உயிரினங்கள் இன்னல் எய்தக்
கண்டவிடத்தே, வரைசெய் தோண்மைந்தர் - மலையை ஒத்த தோள்களையுடைய மறவர்,
வாழ்க்கை மதிக்கிலார் - (அவ்வின்னல் களைந்து அவற்றை உய்யக்கோடலை மதிப்பதல்லது)
தம் வாழ்வினை ஒரு பொருளாக மதிப்பார் அல்லர், திரைசெய் நீருலகம் காக்கும் -
அலையெறியும் கடலாற்சூழப்பட்ட உலகத்தைக் காவல் செய்கின்ற, செய்கைமேற் படைக்கப்
பட்ட - சிறந்த தொழிலுடைய அரசர் குடியில் இறைவனாற் படைக்கப்பட்ட, அரசர்தம்
புதல்வர் - வேந்தர்
 


     (பாடம்) 1. இன்றைக் கொன்று. 2. ருல. 3. மதி யெலாம். 4. திதனி லுண்டோ.