பக்கம் : 518
 

     மக்களாகிய, வனப்பின் மிக்கார்க்கு - அரசிலக்கணம் முதலிய எல்லா அழகுகளானும்
மிகுந்தவர்க்கு, ஐயா! - ஐயனே!, அதனிற்பிறிது அறம் உண்டோ - அதனின் உயரிய அறம்
வேறு உண்டு கொல்! (இல்லை என்றபடி) (எ - று.)

     உலகில் வாழும் பிறவுயிர்கட்கு இடுக்கண் நேர்ந்துழித்தம் வாழ்க்கையை
மதித்தொதுங்காது, அவற்றின் இடுக்கண் களைந்து காக்கவே முற்படுவர் ஆண்மையாளர்;
மேலும் அரசர் குடிப்பிறந்தோர்க்கு இது தலைக்கடன் ஆகும்; அரசற்கு இதனிற் சிறந்த
அறம் பிறிதில்லை என்று நம்பியைப் பாராட்டினான் என்க.
 

( 201 )

யாக்கையால் எய்தும் பயன்
774.

கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் 1களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
2பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னோ.
 

      (இ - ள்.) பெற்ற இவ் உடம்பு - அரிதிற் பெற்றுடைய இம்மானிட யாக்கை, கற்றவர்
- மெய்ந்நூல்களை ஓதியுயர்ந்தோர், கடவுள் தானம் சேர்ந்தவர் -
மெய்ப்பொருளின்றன்மையை இவ்வுடம்பினின்றே எய்தினவர், களைகணில்லார் - தமக்குக்
களைகணாவாரை யில்லாதவர், அற்றவர் - ஏழைகள், அந்தணாளர் - அந்தணர்கள்,
அன்றியும் அனைய நீரார்க்கு - அல்லாமலும் இன்னோரன்ன பிறர்க்கும், உற்றதோர்
இடுக்கண் வந்தால் - பொருந்திய இடையூறு வந்தபொழுது, உதவுதற்கு உரியது - விரைந்து
அவ்விடையூறு களைந்து அவர்க்கு உதவி செய்தற்கே உரியதாம், அன்று ஆயில் -
அங்ஙனம் உதவுதலின்றானால், இவ்வுடம்பு தன்னாற் பெறுபயன் இல்லை -
இம்மானிடயாக்கையாற் கொள்ளக் கிடந்த பயன் பிறிதொன்று இல்லையாம், (எ - று.)

     மானிட உடல், கற்றவர் கடவுட்டானம் சேர்ந்தவர் களைகணில்லார் அற்றவர்
அந்தணாளராகிய இன்னோரன்னார்க்கு உதவி செய்தற்கே உரித்தாம்; அவ்வுதவி செய்யாவழி
இதனைப் பெற்றிலாதவரே ஆவர் என்க. கடவுட்டானம் - மித்தியாதிருட்டி முதலிய
பதினாக்கு குணத்தானங்களில் ஆறுமுதம் பன்னிரண்டு வரையுள்ள குணத்தானங்கள் என்க.
இவை துறவிகட்குரியன ஆதலால் கடவுட்டானம் என்றார்.
 

( 202 )

இறவாது நிற்போர் இவர் எனல்

775.

மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு 3மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற 4வழகு போலா

 


     (பாடம்) 1. கிளைக ளில்லார். 2. பெற்ற திவ். 3. வாயில். 4. வழகி.