பக்கம் : 525
 

     செங்கண் மாலோடே விசயன் அப்பாலைநிலங்கடந்து முல்லை நிலத்தை எய்தியவுடன்
அதன் வளத்தையும் எடுத்துரைக்கின்றான் என்க.
 

( 214 )

வேறு
முல்லை நிலத்தின் மாண்பு
787.

மாலும்வாரி திங்கண்மூன்றும் 1வந்தறாத மாண்பினா
லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே.
 

      (இ - ள்.) திங்கள் - மாதந்தோறும், மால் வாரி - பெரிதாகிய மழை வருவாய்
வருதலானே, மூன்றும் வந்து - மும்முறையும் நீர்வந்து, அறாத - நீர்வளம் அறாத,
மாண்பினால் - மாட்சியுடைமையால், ஆலும் மாவல்தானை - ஆரவாரிக்கின்ற யானை
முதலிய வலிய படையையுடைய, நம் அடிகள் ஆளும் - நமது தெய்வம் போன்ற தந்தை
ஆட்சி செய்யும், நாட்டகம் - நாட்டினுள், கால மாண்பின் அன்றியும் -
பருவமல்லாதிருந்தும், கார்கவின்ற நீரவே போலும் மாண்பின் - கார்காலத்தால் அழகுற்ற
தன்மையை ஒத்து மாட்சிமையுடைய, ஏர்கலந்து - அழகு பொருந்தி, புறணி - இம்முல்லை
நிலங்கள், பொங்குநீர் - பொங்குகின்ற நீர்ப்பெருக்கையுடையன, (எ - று.)

மாலும் என்புழி - உம் : அசைநிறை, வாரி - மழை வருவாய். இம்முல்லை நிலம் திங்கள்
மும்மாரி தவிராது பெய்தலால் வளமிகுந்து அழகுற்று விளங்குகின்ற தென்றபடி.
 

( 215 )

 

788.

கொண்டல்வாடை யென்னுங் 2கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
வண்டுபாட 3வல்லியென்னு மாதராடு நாடகங்
கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே.
 

     (இ - ள்.) கொண்டல் வாடை என்னும் - வடகீழ்த்திசைக் காற்று என்னும், கூத்தன் -
ஆடலாசிரியன், யாத்த கூத்தின் மாட்சியால் - செய்தளித்த கூத்தியல் நூலின் மாண்பினை
மேற்கொண்டு, விண்டமா மலர்ப்
 


     (பாடம்) 1. வந்துறாத. 2. கூத்தனயர்த்த கூத்தின். 3. வல்லிமன்னு.