பக்கம் : 528 | | | | றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற் கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே. | (இ - ள்.) தேன் அவாவி மூசுகின்ற - அளிகள் விரும்பி வீழ்கின்ற, தேம்பிறழ்பூ தாம்கலந்து - தேன் துளும்புகின்ற மலருடன் கலந்து, கான நாவல் - காட்டுநாவல் மரங்கள், கொம்பினிற்கனிந்து - கிளைகளிலே பழுத்து, கால் அசைந்து - காற்றால் அசைக்கப்பட்டு உதிர்ந்துகிடப்ப, அவற்று ஏனைமாடு - அவற்றின் அயற்பக்கங் களிலே, வண்டு இருந்து - கரியநிற முடைய வண்டுகளும் மொய்த்தலால், இருண்ட கானம் - இருண்டு தோன்றுகின்ற காடு, இங்கு இதற்கு ஊனமாக - இங்கு இந்நிலவொளி பரந்தாற்போற்றோன்றும் காட்சிக்கு முரணாக, இருட்பிழம்பு உறங்குகின்றது ஒக்கும் - இருட்கற்றை நிறைந்தது போன்று தோன்றும், (எ - று.) ஒருசார் முல்லை முதலிய மலர்மிக்கு நிலவொளி தோன்றினாற் போற் றோன்றும் அக்காட்டினூடே, இதற்கு முரணாகக் காட்டு நாவற் பழங்கள் கனிந்து உதிர்ந்து கிடப்ப, ஆங்குக் கரிய வண்டுகளும் செறிய மொய்த்துள்ள தோற்றம், ஒருசார் இருள் படுத்துறங்கிக் கிடந்தாற் போற்றோன்றும் என்க. | ( 220 ) | | 793. | வாயிதழ்த் திறங்கொளக் கனிந்ததொண்டை வந்தொசிந்து தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின் பாயிதழ்ப் பரப்பின்மே 1லரத்தகோப மூர்ந்தயற் சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே. | (இ - ள்.) வாய் இதழ்த்திறங்கொள - செவ்விய வாயின் கண் உள்ள அதரங்களின் தன்மைகொண்ட, கனிந்த தொண்டை வந்து - பழுத்த கொவ்வைக்கனிகள் வந்துபொருந்தாநிற்ப, ஒசிந்து - அசைந்து, தூயிதழ்த் துணர் துதைந்து - தூய்தாகிய இதழையுடைய பூங்கொத்துக்கள் செறிந்து, தோன்றுகின்ற தோன்றியின் - காணப்படுகின்ற செங்காந்தளினது, பாயிதழ்ப் பரப்பின்மேல் - அகன்ற மலர்ப்பரப்பின்மேல், அரத்த கோபம் ஊர்ந்து - இந்திர கோபப்புழுக்களும் ஊரா நிற்ப, அயல் - பக்கத்தே, சேயிதழ்ப் பொலிந்த காடு - வெவ்விதழ்களையுடைய மலரால் பொலிவுற்ற அக்காடு, செக்கர் வானம் ஒக்கும்- செக்கர் வானத்தைப்போலக் காணப்படும், (எ - று.) மற்றொருசார் சிவந்த கொவ்வைக் கொடிகள் படர்ந்து கனிந்துண் மையாலும் செங்கோடல்கள் நிறையப் பூத்துண்மையாலும் அவ்விடத்தே இந்திரகோபப் புழுக்கள் ஊர்தலுண்மையானும் செக்கர்வானத்தை ஒத்துச் செவேலெனத் தோன்றும் என்க. | ( 221 ) |
| (பாடம்) 1. லார்த்த. | | |
|
|