பக்கம் : 529
 
 
794.

ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொதும் பயற்பொலிந்த
கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்
கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்
தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம்.
 

      (இ - ள்.) ஊங்கெலாம் - உவ்விடமெல்லாம், ஆடிணர்க்கொடிப்படர்
அகிற்பொதும்பு - அசைகின்ற பூங்கொத்துக்களையுடைய கொடிகள் படர்ந்துள்ள அகில்மரச்
சோலைக்கு, அயல் பொலிந்த - பக்கத்தே பொலிவுற்ற நின்ற, கூடிணர் - கூடிய
கொத்துக்களோடு, குழாம்நிலை - கூட்டமாக நிற்றலையுடைய, குமிழ்கொழு மலர்மிசை -
குமிழமரத்தினது கொழுவிய மலர்களின்மேல், இணர்க்கோடு நிலைக்கு ஒசிந்த -
பூங்கொத்துக் களையுடைய தம் கிளைகளைத் தாங்கி நிற்றற்கு ஆற்றாத, கொன்றை -
கொன்றை மரங்கள், விண்டதாது சோர்ந்து - சொரிந்து பூந்துகள் உதிர்ந்து, ஓடு
இணர்ச்சுடர் - ஓடவிட்டுத் தூய்தாக்கிய சுடரையுடைய, பொன் உக்க தானம் ஒக்கும் - பொற்றுகள் உதிர்க்கப்பட்ட இடத்தை ஒக்கும், (எ - று.)

     மற்றொருசார் அகில்மரப் பொழிலிலே குமிழமரம், பூத்திருப்ப, கொன்றைப்பூவின் தாது
உதிர்ந்து கிடக்கும் தோற்றம் பொற்றுகள் பரப்பிய இடத்தைப் போன்று தோன்றும் என்க.

    குமிழமலர் - தீக்கும், கொன்றைமலர்த்தாது, பொற்றுகளுக்கும் உவமைகள். ஓடு -
ஓடவிட்ட; உருக்கித் தூய்மை செய்யப்பட்ட என்க.
 

( 222 )

 
795.

பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்
தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ
கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே.
 

     (இ - ள்.) பார்மகிழ்ந்த - உலகம் மகிழ்தற்குக் காரணமான, பைஞ்சுருள் -
பசியதாய்ச் சுருண்ட தோகைகளையுடைய, பயிர்மிசை - புற்களின்மீது, பயின்று எழுந்து -
பயிலுதலைச் செய்து, ஏர்கலந்து - அழகுடையனவாய், பாசிலைப்பரபினூடு - பசிய
இலைகளின் செறிவையுடைய சோலைகளின் ஊடேயிருந்து, இரைத்து - அகவி, கார்மகிழ்ந்த
கார்மயில் - முகிலை விரும்பும் இயல்புடைய நீனிறமஞ்ஞைகளின், கலாபம்மொய்த்த கானகம்
- தோகைகள் விரிக்கப்பட்டுச் செறிந்துள்ள காடு, நீர் மகிழ்ந்த - நீரானிறைந்த, நீர்க்கடல் -
தன்மையையுடைய கடல், நிரந்தது ஒக்கும் நீரதே - பரவிக் கிடந்ததைப் போன்றதொரு
தன்மைத்தாம்; அரோ : அசை, (எ - று.)

     மற்றொருசார் கொழுவியவாய் வளர்ந்த பசும்புற்றரை யிடத்தே, முகிலைக் கண்டு
மகிழ்ந்த மயிற்குழாம் தம் தோகைகளை விரித்தபடி