(இ - ள்.) ஏறுகொண்ட கோவலர் - காளைகளையுடைய இடையர்கள், ஏந்து தண்ணவக்குரல் - ஏந்தியுள்ள ஒரு கட்பறையின் ஒலியோடு, மாறு கொண்ட - மாறுபட்ட, கோடியர் - கூந்தர்களுடைய, மணிமுழா முழங்கலில் - அழகிய மத்தளமும் முழங்குதலால், தூறுகொண்ட தோகை - அடர்ந்த தோகையையுடைய, மஞ்ஞை ஆடல்கண்டு - மயில்கள் களித்தாடுதலைப் பார்த்து, கண்மகிழ்ந்து - கண்களித்து, மான்கணம் சாறு கொண்டு தயங்கும் நீர - மான்கூட்டங்கள் திருவிழாக் கண்டு களிப்பன ஒத்தன, சாரெலாம் - இப்பக்கங்கள் எல்லாம், (எ - று.) ஒருசார் கோவலரின் தண்ணவ இன்னிசை பரவ, ஒருசார் கூத்தரின் இன்னிசை பரவ, மயிற்கணங்கள் ஒருசார் கூத்தாட, விழாக்கண்டு மகிழும் மகளிரைப் போன்று மான் கணங்கள் கண்டும் கேட்டும் மகிழ்ந்தன என்றபடி. |
(இ - ள்.) கார்மணந்த கானயாறு - முகில்கள் சூழ்ந்துள்ள காட்டகத்தே யுள்ள யாறு, கல்அலைத்து - மலைகளைவருத்தி, இழிந்துஒலிக்கும் - ஒழுகி ஆரவாரிக்கும், நீர்மணந்த நீள்கரை - நீரைப் பொருந்திய அவ்வியாற்றின் நீண்ட கரையின்கண், நிரைத்தெழுந்த நாணல்சூழ் - வரிசையாக முளைத்து வளர்ந்துள்ள நாணல்களாற் சூழப்பட்ட, வார்மணல் பிறங்கன்மாலை - நீண்ட மணற்குன்றுகளின் நிரல். வல்லிவிண்ட தாதணிந்து - பூங்கொடிகள் உதிர்த்த பூந்துகள் போர்க்கப்பட்டு, தார்மணந்த ஆரமார்ப - மாலையை அணிந்து சந்தனந்திமிர்ந்துள்ள மார்பையுடையோனே!, யாகசாலைபோலும் - யாகசாலையை ஒக்கும், (எ - று.) கானயாற்றின் கரை நாணல் சூழ்ந்து மணற் பரப்போடே பூங்கொடிககள் மகரந்தத்தை உதிர்த்துப் பரப்புதலாலே யாகசாலை போன்று தோன்றும் என்க. |